India
மகனை அடித்தே கொலை செய்த தந்தை.. இதற்காகவா இப்படி செய்தார் ? வெளிவந்த அதிர்ச்சி காரணம் !
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள தொட்டநாகரா கிராமத்தை சேர்ந்தவர் ஆஷா. இவருக்கும் அதே பகுதியில் உள்ள பிளிசாரே கிராமத்தை சேர்ந்த சதீஸ் என்பவருடன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது இவர்களுக்கு சுப்ரீத் என்ற ஒரு மகனும் இருக்கிறார்.
3 ஆண்டுகள் ஒன்றாக இருந்த இவர்கள் பின்னர் சில பிரச்னைகள் காரணமாக பிரிந்து விட்டனர். அதன் பின்னர் சில மாதங்களுக்கு முன்னர் உமேஷ் என்பவரை ஆஷா திருமணம் செய்துகொண்டுள்ளார். ஆஷாவின் மகனும் இவர்களோடு வசித்து வருகிறார்.
தற்போது 7 வயதாகும் சுப்ரீத் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். இந்நிலையில் சிறுவன் சுப்ரீத்திற்கு உமேஷ் வீட்டுப்பாடம் சொல்லிக்கொடுத்துள்ளார். அப்போது சுப்ரீத் சரியாக வீட்டுபாடம் எழுதாததால் உமேஷ் ஆத்திரம் அடைந்து அவரை அடித்து கீழே தள்ளியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த சுப்ரீத்தின் அழுகை சத்தம் கேட்டு அங்கு வந்த தாய் ஆஷா உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக பெங்களூருவிற்கு கொண்டு செல்லும்படி கூறியுள்ளனர்.
அதன்படி சிறுவன் பெங்களூரு சென்றபோது வழியிலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் வழக்கு பதிவு செய்து உமேஷிடம் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரூ.5000 பஞ்சாமிர்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகள் வரவேற்பு!
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 உயர்த்தி வழங்கப்படும் : முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி!
-
“விஸ்வகுருவுக்கா இந்த நிலைமை? ; உலக நாடுகள் சிரித்திருக்க மாட்டார்களா?” : முரசொலி தலையங்கம்!
-
“1.31 கோடி பெண்களுக்கு ரூ.5,000 சிறப்பு மகளிர் உரிமை தொகை வழங்கப்படும்...” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
“கைகட்டி வேடிக்கை பார்ப்போம் என்று நினைத்தார்களா? தமிழ்நாடு தலைகுனியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!