India
காந்தி, நேருவை இழிவுபடுத்தும் மோடி.. சுதந்திர தினத்தில் ஒன்றிய அரசு மீது சோனியா காந்தி தாக்கு!
நாடு முழுவதும் இன்று 75 ஆம் ஆண்டு சுதந்திரதின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் 1947ம் ஆண்டு நடந்த சேதப்பிரிவை குறித்து பா.ஜ.க சார்பில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ஜவஹர்லால் நேரு, முகமது அலி ஜின்னா ஆகிறார்தான் தேசிப் பிரிவினைக்குக் காரணம் என்பது போல் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அரசியல் ஆதாயங்களுக்காக வரலாற்று உண்மைகளைத் தவறாகச் சித்தரிப்பதா? என பா.ஜ.கவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில்,"75 ஆண்டு சுதந்திர இந்தியாவில் நாம் பல சாதனைகளைச் செய்துள்ளோம். ஆனால் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற வீரர்களின் தியாகங்களையும் அவர்களின் பெருமைகளையும் சிறுமைப்படுத்துவதிலேயே பா.ஜ.க அரசு குறியாக உள்ளது.
இந்த நாசிச அரசு தனது அரசியல் ஆதாயங்களுக்காக வரலாற்றுகளை தவறாகச் சித்தரித்து வருகிறது. காந்தி, நேரு, படேல், ஆசாத் போன்ற தலைசிறந்த தலைவர்கள் குறித்து அவதூறுகளை பரப்புவதை ஒருபோதும் காங்கிரஸ் அனுமதிக்காது. கடுமையாக எதிர்க்கும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“ஒன்றிய விளையாட்டுத் துறையில் 21% நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
ரூ.718 கோடி முதலீட்டில் 663 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடியது VB-G RAM G முன் வடிவு!” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
“சுய உதவிக்குழுக்களின் தயாரிப்பு பொருட்கள், இதுவரை சுமார் ரூ.690 கோடிக்கு விற்பனை!” : துணை முதலமைச்சர்!
-
“பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் திராவிட மாடல் அரசு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை!