India
அறையில் அடைத்து பெண்ணுக்கு 5 ஆண்டு பாலியல் வன்கொடுமை.. குஜராத் பாஜக அமைச்சர் மீது கணவன் போலிஸில் புகார்!
குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில முதல்வராக புபேந்திர படேல் உள்ளார். இவரின் அமைச்சரவையில் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் அர்ஜூன் சிங் சவுகான்.
இவர் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளிக்கப்பட்டுள்ளது குஜராத் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹால்தார்வாஸ் கிராம பஞ்சாயத்தின் முன்னாள் தலைவர்தான், தனது மனைவிக்கு அமைச்சர் அர்ஜூன் சிங் சவுகான் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகப் புகார் அளித்துள்ளார்.
அவரின் அந்த புகாரில், 2015ம் ஆண்டு என் மனைவிக்கும், அமைச்சருக்கும் அறிமுகம் கிடைத்தது. இதையடுத்து எனது மனைவியை அர்ஜூன் சிங் சவுகான் பஞ்சாயத்துத் தேர்தலில் நிற்க வைத்து வெற்றிபெற வைத்தார்.
இதையடுத்து ஆலோசனை கூட்டம் என்ற பெயரில் எனது மனைவியை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கொரோனா காலத்தில் கூட தனியறையில் அடைத்து வைத்து வன்கொடுமை செய்துள்ளார்.
எனவே அமைச்சர் அர்ஜூன் சிங் சவுகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தெரிவித்துள்ளார். இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமைச்சர் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளிக்கப்பட்டுள்ளது குஜராத் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லா மாநிலங்களிலும் பா.ஜ.க கட்சியைச் சேர்ந்தவர்கள் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கி கொள்வது பொதுமக்கள் மத்தியில் முகம்சுளிக்க வைத்துவருகிறது.
Also Read
-
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!
-
சூழ்ந்த மக்கள்.. செய்தி சேகரித்த பத்திரிகையாளர்.. மிரட்டிய தவெக அமைச்சரின் ஆதரவாளர்.. வைரலாகும் வீடியோ!
-
தொகுதி மறுவரையறை கூட்டம் எதற்காக? ; தவெக அரசை இயக்குவது? : அடுக்காடுக்காக கேள்விகளை எழுப்பிய கனிமொழி MP!
-
ஆபத்தான FCRA சட்டம் : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு கோரிக்கை வைத்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“ஜிஎஸ்டி அமலுக்கு பிறகு மாநிலங்களின் நிதிசார் சுயாட்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது!” : தங்கம் தென்னரசு!