India
"GST வரி விதிப்பால் மக்களை நாம் காயப்படுத்துகிறோம்".. ஒன்றிய அரசை விமர்சித்த பா.ஜ.க MP!
மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்தே எல்லா பொருட்கள் மீதும் ஜி.எஸ்.டி வரியை விதித்து வருகிறது. இதனால் உணவு உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருவது சாமானிய மக்களைப் பாதித்துள்ளது.
தற்போது இந்தியா கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து வரும் நிலையில், அரசி, பருப்பு, பால் உள்ளிட்ட பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்றிய அரசின் இந்த முடிவிற்குக் காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றன. நேற்று துவங்கிய நாடாளுமன்ற கூட்டத்தின்போதும் எதிர்க்கட்சிகள் உணவுப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இந்நிலையில் பா.ஜ.க எம்.பி வருண் காந்தி ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி வரி விதிப்பிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து வருண் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "வேலையில்லா திண்டாட்டத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் அதிக நிதிச்சுமையை இது ஏற்படுத்தும்.
குறிப்பாக வாடகை வீட்டில் வசிக்கும் இளைஞர்களுக்கு அதிக நிதிச்சுமை ஏற்படுத்தும். அவர்களுக்கு நிவாரணம் தேவைப்படும் போது நாம் அவர்களைக் காயப்படுத்துகிறோம்" என தெரிவித்துள்ளார். இதையடுத்து வருண் காந்தியின் ட்விட்டரை வைரலாக்கி ஒன்றிய அரசை இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.
Also Read
-
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்திற்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குக: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
திராவிட மாடல் ஆட்சியில் 25 இலட்சம் பேருக்கு பட்டா! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்!
-
“ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் பெறக்கூடாது என்பது கொடூரமான சர்வாதிகார மனோபாவம்!” : முரசொலி தலையங்கம்!
-
அரசு உதவி வழக்குரைஞர் நிலை 2 பணி... தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
சட்டம் - ஒழுங்கை உறுதிப்படுத்திய காவல்துறை: தமிழ்நாட்டில் முக்கிய குற்றங்கள் குறைந்தது: அதிகாரிகள் தகவல்!