India
பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரம்.. கணவன் செய்த கொடூர செயல்: உறவினர்கள் அதிர்ச்சி!
அசாம் மாநிலம், பைரப்நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஷகீல் அகமது. இவரது மனைவி சும்னா பேகம். இந்த தம்பதிக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் இவரது கணவர் மற்றும் மாமியார் ஆகியோர் பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரத்தில் சும்னா பேகத்தை அடித்து கொடுமைப் படுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று உச்சக்கட்ட கொடுமையாக குடும்பத்தார் அனைவரும் சேர்ந்து சும்னா பேகத்தின் வாயில் ஆசிட் ஊற்றியுள்ளனர். இதில் அவரது வாய் முழுவதும் வெந்துள்ளது.
பிறகு அவரை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்குச் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து போலிஸார் அவரது கணவர், மாமியார் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆண் குழந்தைக்குப் பதில் பெண் குழந்தை பிறந்தால் மனைவி வாயில் ஆசிட் ஊற்றி குடும்பமே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !