India
மாணவிகள் முன் ஆபாசமாக நடந்துகொண்ட பிரபல மலையாள நடிகர்.. போக்சோவில் கைது செய்த போலிஸ் !
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ஸ்ரீஜித் ரவி. மலையாள நடிகரான இவர், தமிழில் வெளியான கும்கி, வேட்டை, அசுரவதம், மதயானைக்கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் வில்லன் தோற்றத்தில் நடித்துள்ளார். தற்போது சில மலையாள படங்களில் நடித்து வரும் இவர், அந்த பகுதியில் பிரபலமான நடிகராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த வாரம் திருச்சூரிலுள்ள ஆயந்தோல் எஸ்.என்.பார்க் அருகே 11 மற்றும் 5 வயது சிறுமிகள் நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது அவர்களை பார்த்ததும், தனது உடைகளை கழற்றி நிர்வாணமாக நின்று, ஆபாச செயல்களில் ஈடுபட்டுள்ளார். பின்னர் ஒரு கருப்பு நிற காரில் ஏறிச்சென்றுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சிறுமிகள் அவர்கள் பெற்றோரிடம் சொல்ல, ஆனால் அவர்களுக்கு அடையாளம் தெரியவில்லை. எனவே அவர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர்.
பின்னர் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அந்த பகுதியில் இருந்த சிசிடிவியை ஆய்வு செய்தனர். அப்போது அந்த நபர் ஸ்ரீஜித் ரவி என்று தெரியவந்தது. இதையடுத்து இன்று காலை திருச்சூர் மேற்கு காவல் நிலைய காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரித்தனர்.
அப்போது ஸ்ரீஜித் ரவிக்கு தனக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு மருந்து உட்கொள்வதாகவும் காவல்துறையிடம் தெரிவித்தார். இருப்பினும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
ஏற்கனவே கடந்த 2016 ஆம் ஆண்டு இதேபோல் 16 பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக நடந்து கொண்டதால், பாலக்காடு காவல்துறையினரால் ஸ்ரீஜித் ரவி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
அதிமுகவினருக்கு அமைச்சர் பதவி? - “தூய்மையான அரசியலுக்கு உகந்துதானா?” - விசிக MP ரவிக்குமார் கேள்வி!
-
மீண்டும் மீண்டும் மக்களை அவதிக்குள்ளாக்கும் த.வெ.க : வரவேற்பு கொண்டாட்டத்தால் போக்குவரத்து நெரிசல்!
-
“இன்று மகளிரின் நம்பிக்கையாக திகழும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” : முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்!
-
ரூ.1000 வரவு வைத்தது தவெக அரசு : முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொண்டு வந்தே திட்டங்களே நிலைத்து நிற்கும்!
-
“இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல”: மீண்டும் பிற்போக்குவாதிகளை கதறவிட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி