India
டியூசன் படிக்க வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை.. போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் கைது!
ஆந்திர மாநிலத்திலுள்ள ராய்சோட்டி என்ற பகுதியை சேர்ந்தவர் அபிராம ரெட்டி. இவருக்கு திருமணம் ஆகாத நிலையில், அந்த பகுதியிலுள்ள மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வந்துள்ளார். அதில் 10 ஆம் வகுப்பு படிக்கும் 16 வயதுடைய மாணவி ஒருவர் பயின்று வந்துள்ளார்.
அப்போது சுமாராக படிக்கும் அந்த மாணவியிடம் அபிராம ரெட்டி, 10-ம் வகுப்பில் உன்னை தேர்ச்சி அடைய வைப்பதாக ஆசை வார்த்தை கூறி மாணவியிடம் தவறாக பழகி வந்துள்ளார். மேலும் மற்ற மாணவர்கள் வீட்டிற்கு சென்ற பிறகும் சிறப்பு வகுப்பு எடுப்பதாக கூறி இரவு, நேரமாகி வீட்டிற்கு விடுவார். இப்படியாக தொடர்ந்து 7 மாதங்கள் அந்த மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மேலும் இது குறித்து வெளியில் யாரிடமாவது கூறினால் 10-ம் வகுப்பு தேர்வில் பெயில் ஆக்கி விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன மாணவி இதுகுறித்து வெளியில் யாரிடமும் கூறாமல் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அண்மையில் வெளியான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அந்த மாணவி இரண்டு படங்களில் தேர்ச்சி பெறவில்லை. இது குறித்து அவரது பெற்றோர்கள் அவரிடம் கேள்வியெழுப்ப, டியூசன் நடத்தும் ஆசிரியர் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற வைப்பதாக கூறியதால் சரிவர படிக்கவில்லை என்றும் அவர் தொடர்ந்து பாலியில் தொல்லை கொடுத்ததால் பாடத்தில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும் தெரிவித்தார்.
இதை கேட்டதும் அதிர்ச்சியடைந்த அந்த மாணவியின் பெற்றோர்கள், இது குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், டியூசன் ஆசிரியர் அபிராம ரெட்டியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். டியூசன் படிக்க வந்த மாணவியிடம் அத்துமீறிய ஆசிரியரின் செயலால் பெற்றோர்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.
Also Read
-
"SIR உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
“S.I.R-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்!: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!
-
SIR விவகாரம் : முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்... 40 கட்சிகள் பங்கேற்பு! - விவரம்!
-
ஒக்கியம் மடுவு கால்வாயில் ரூ.27 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு!