India
காஷ்மீர் பாகிஸ்தானுக்கா? சிவில் சர்வீஸ் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் வெடித்த சர்ச்சை!
மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிவில் சர்வீஸ் தேர்வு கடந்த ஜூன் 19 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் கேட்கப்பட்டுள்ள ஒரு கேள்வி அரசியலில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. காஷ்மீர் குறித்த கேள்வியால் தேர்வு எழுதிய மாணவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
அந்த தேர்வில் 'காஷ்மீரை பாகிஸ்தானுக்கு கொடுக்கும் முடிவை இந்தியா எடுக்க வேண்டுமா' என்ற கேள்வி எழுந்ததுதான் இத்தனை சர்ச்சைக்கும் காரணமாக அமைந்துள்ளது. அதிலும் அந்த கேள்வியுடன் இரண்டு வாதங்கள் கொடுக்கப்பட்டு பதிலுக்கு நான்கு ஆப்ஷன்களும் கொடுக்கப்பட்டிருந்தது.
அதாவது முதலில் ஆம், இந்தியாவின் பணத்தை சேமிக்கும் என்ற வாதமும், இல்லை. இதுபோன்ற முடிவு மேற்கொண்டு இதுபோன்ற கோரிக்கைகள் அதிகரிக்கச் செய்யும் என்ற வாதமும் அதில் இடம்பெற்றுள்ளது.
மேலும் பதிலுக்கான நான்கு ஆப்ஷன்களாக, "A. வாதம் 1 வலிமையானது , B. வாதம் 2 வலிமையானது, C. இரண்டு வாதங்களும் வலிமையற்றது, D. இரண்டு வாதங்களும் வலிமையற்றது” போன்றவை இடம்பெற்றுள்ளது.
இந்த கேள்வியும் அதற்காக ஆப்ஷன்களும் இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து கேள்வித்தாளை உருவாக்கிய இரண்டு நிபுணர்களும் பிளாக் லிஸ்டில் வைக்கப்பட்டுள்ளனர். அதோடு இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசு விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!