India
சேர் மீது ஏறி ஜன்னல் திரையை சரி செய்ய முயன்ற மாணவி.. 5வது மாடியிலிருந்து கீழே விழுந்ததில் நடந்த சோகம்!
கர்நாடக மாநிலம் மங்களூர் நகர், கத்ரி அருகே உள்ள கங்கநாடி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஐந்தாவது மாடியில் வசித்து வந்தவர் முகமது இம்தியாஸ் (48). இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இதில் முதல் மகளான சேஷையர் இன்தியாஜ் (15) பிஜய் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இன்று மாலை தனது வீட்டில் பால்கனியில் சேர் மீது ஏறி பால்கனியில் திரைச்சீலைகளை சரிசெய்துக்கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவரின் வீட்டின் வெளிப்புறம் கீழே தவறி விழுந்துவிட்டார். சுமார் 60 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததால் தலை மற்றும் கால்முறிவு ஏற்ப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் மாணவிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் இது சம்பந்தமாக மங்களூர் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Also Read
-
551 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பாட்டா... 5,000 மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சர் அசத்தல்!
-
எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க அதிரடி நடவடிக்கை - சிறப்பு முயற்சிகள் எடுத்த திராவிட மாடல் அரசு!
-
“நெல் சாகுபடியில் சாதனை... நெல் கொள்முதல் இலக்கினை உயர்த்த வேண்டும்” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
5 ஆண்டுகளில் TNPSC, தேசிய நலவாழ்வு குழுமம் மூலம் 48,418 பேருக்கு பணி ஆணை:அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
அரசுக் கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 5 உதவிப் பேராசிரியர்கள் : பணி ஆணைகளை வழங்கிய முதலமைச்சர்!