India
சேர் மீது ஏறி ஜன்னல் திரையை சரி செய்ய முயன்ற மாணவி.. 5வது மாடியிலிருந்து கீழே விழுந்ததில் நடந்த சோகம்!
கர்நாடக மாநிலம் மங்களூர் நகர், கத்ரி அருகே உள்ள கங்கநாடி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஐந்தாவது மாடியில் வசித்து வந்தவர் முகமது இம்தியாஸ் (48). இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இதில் முதல் மகளான சேஷையர் இன்தியாஜ் (15) பிஜய் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இன்று மாலை தனது வீட்டில் பால்கனியில் சேர் மீது ஏறி பால்கனியில் திரைச்சீலைகளை சரிசெய்துக்கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவரின் வீட்டின் வெளிப்புறம் கீழே தவறி விழுந்துவிட்டார். சுமார் 60 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததால் தலை மற்றும் கால்முறிவு ஏற்ப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் மாணவிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் இது சம்பந்தமாக மங்களூர் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Also Read
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!
-
“அதிமுகவின் வாக்குறுதிகளுக்கு வாய் இருந்தால் கதறி அழுதிருக்கும்..” - பட்டியலிட்டு அமைச்சர் ரகுபதி தாக்கு!