India
சேர் மீது ஏறி ஜன்னல் திரையை சரி செய்ய முயன்ற மாணவி.. 5வது மாடியிலிருந்து கீழே விழுந்ததில் நடந்த சோகம்!
கர்நாடக மாநிலம் மங்களூர் நகர், கத்ரி அருகே உள்ள கங்கநாடி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஐந்தாவது மாடியில் வசித்து வந்தவர் முகமது இம்தியாஸ் (48). இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இதில் முதல் மகளான சேஷையர் இன்தியாஜ் (15) பிஜய் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இன்று மாலை தனது வீட்டில் பால்கனியில் சேர் மீது ஏறி பால்கனியில் திரைச்சீலைகளை சரிசெய்துக்கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவரின் வீட்டின் வெளிப்புறம் கீழே தவறி விழுந்துவிட்டார். சுமார் 60 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததால் தலை மற்றும் கால்முறிவு ஏற்ப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் மாணவிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் இது சம்பந்தமாக மங்களூர் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!