India
காதல் திருமணம் செய்த இளைஞர் நடுரோட்டில் குத்தி கொலை.. ஒரே மாத்தில் பதைபதைக்கும் 2 ஆணவக் கொலைகள்!
ஹைதராபாத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்புதான், காதலி கண்முன்னே காதலன் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை குறித்து நடந்த விசாரணையில், காதலர்கள் இருவரும் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் குடும்பத்தினரே மகளின் காதல் கணவரை கொலை செய்தது தெரியவந்தது.
இந்நிலையில் மீண்டும் இதே ஹைதராபாத்தில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் நீரஜ் பன்வார். இவர் வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்துக் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதிக்கு இரண்டு மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்நிலையில், நேற்று தந்தையுடன் வெளியே சென்ற நீரஜ் பன்வாரை நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென அவரை சரமாரியாகக் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் நீரஜ் பன்வார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ததில் நீரஜ் பன்வார் வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்ததால், பெண்ணின் வீட்டாரே அவரை கொலை செய்தது தெரியவந்துள்ளது.
பின்னர் இந்த கொலையில் ஈடுபட்ட ரோஹித், ரஞ்சித், கவுசிக், விஜய் ஆகிய நான்குபேரை போலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே மாத்தில் மட்டும் இரண்டு ஆணவக் கொலை நடந்துள்ள சம்பவம் ஐதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!