India
வரதட்சணை கொடுமை: மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவன்.. காவல்நிலையத்தில் இளம்பெண் பகீர் வாக்குமூலம்!
ராஜஸ்தான் மாநிலம், புரத்பூரைச் சேர்ந்த நபருக்கு 2019ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து வரதட்சணையாகப் பெண் வீட்டார் கொடுக்க வேண்டிய ரூ.1.5 லட்சம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த பெண்ணின் கணவர் அவரை தினமும் வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் தனது மனைவியை உறவினர்களுடன் சேர்ந்து கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை அவரது கணவரே வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றி வரதட்சணை பணத்தைக் கழித்துக் கொள்கிறேன் என மனைவியிடம் கூறி மிரட்டி வந்துள்ளார்.
இதனால் அந்தப் பெண் இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து அவரது கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வரதட்சணைக்காக மனைவியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, கணவனே அதை வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
Also Read
-
அரசு உதவி வழக்குரைஞர் நிலை 2 பணி... தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
சட்டம் - ஒழுங்கை உறுதிப்படுத்திய காவல்துறை: தமிழ்நாட்டில் முக்கிய குற்றங்கள் குறைந்தது: அதிகாரிகள் தகவல்!
-
வெளியானது ஐபிஎல் 2026 முதற்கட்ட அட்டவணை… El Clasico CSK vs MI போட்டிகள் இல்லையா? - முழு விவரம்!
-
“மீனவர்கள் கைதில் மெத்தனமாக இருப்பது ஏன்?” -நாடாளுமன்றத்தில் தி.மு.க MP-க்களின் அனல் பறந்த கேள்விகள்!
-
ரூ.35.45 கோடி மதிப்பில் முன்னாள் படைவீரர்கள் விடுதி, பயிற்சி மையக் கட்டடம்: அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்!