India
பிரசவத்தின் போது உயிரிழந்த கர்ப்பிணி.. மன அழுத்தத்தில் விபரீத முடிவெடுத்த பெண் மருத்துவர்!
ராஜஸ்தான் மாநிலம், லால்சொட் பகுதியைச் சேர்ந்தவர் அர்ச்சனா ஷர்மா. மருத்துவரான இவர் தனது கணவருடன் இணைந்து மருத்துவமனை ஒன்றை நடத்தி வந்தார்.
இந்நிலையில் இந்த மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பிரசவத்திற்காகச் சிகிச்சைக்குச் சேர்ந்துள்ளார். இவருக்கு அர்ச்சனா ஷர்மாதான் பிரசவம் பார்த்துள்ளார். அப்போது அந்தப் பெண் உயிரிழந்துள்ளார்.
இதனால் அப்பெண்ணின் உறவினர்கள் மருத்துவரின் தவறான சிகிச்சையே அவரது உயிரிழப்பிற்குக் காரணம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனால் மன அழுத்தத்திற்கு உள்ளான அர்ச்சனா தன வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பிரசவத்தின் போது கர்ப்பிணி பெண் உயிரிழந்தது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்ததால் மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“11 பந்துகளில் அரைசதம்.. முதல் தர கிரிக்கெட்டில் அசத்திய சூர்யவன்ஷி.. அசந்துபோன இலங்கை வீரர்கள்!”
-
“கல்விக்கூடத்தை அரசியல் வியாபரக் களமாக மாற்றினால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்”-திமுக ஐடி விங் எச்சரிக்கை!
-
காவிமயமாகும் கல்வி; உயிரை காவுகேட்கும் நீட்தேர்வு - திமுக மாணவரணி சார்பில் ஜூன் 23-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!
-
“பனையூர் பங்களா முன் கூடும் கூட்டம்.. இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க என்ற நிலை”: அப்பாவு விமர்சனம்!
-
அரசுப் பள்ளியில் ஆபாசப் பாடலுக்கு ஆட்டம் போட்ட அமைச்சர் விஸ்வநாதன் : காணொளி வெளியாகி சர்ச்சை!