India
மோடி அரசு குறித்து மாநிலங்களவையில் ஜோக் சொன்ன தி.மு.க எம்.பி.. அவையில் சிரிப்பலை!
“ஒன்றிய பா.ஜ.க அரசின் பட்ஜெட்டால் சாமானிய மக்களுக்கும் ஏழைகளுக்கும் எந்தவித நன்மையும் இல்லை” என நிதி மசோதா மீதான விவாதத்தில் தி.மு.க எம்.பி டி.கே.எஸ்.இளங்கோவன் பேசினார்.
ஒன்றிய அரசின் பட்ஜெட் கடந்த பிப்.,1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், துறைகளுக்கான மானிய ஒதுக்கீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கும் மசோதா, நேற்று முன்தினம் மக்களவைவில் நிறைவேறியது. ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதி மசோதாவும் மக்களவைவில் நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிதி மசோதா மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாத்தில் பங்கேற்றுப் பேசிய தி.மு.க எம்.பி டி.கே.எஸ்.இளங்கோவன், ஒன்றிய அரசால் தினக்கூலி செய்பவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “ஒன்றிய பா.ஜ.க அரசின் பட்ஜெட்டால் சாமானிய மக்களுக்கும் ஏழைகளுக்கும் எந்தவித நன்மையும் இல்லை. இது ஒரு தோல்வியுற்ற பட்ஜெட்.
கொரோனா தடுப்பூசி செலுத்தி மக்களைக் காப்பாற்றிவிட்டதாக பா.ஜ.க சொல்கிறது. ஆனால், உணவின்றி உயிரிழக்கும் ஏழைகளைக் காப்பாற்ற ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை ” எனக் குறிப்பிட்டு பா.ஜ.க அரசின் பட்ஜெட்டை கடுமையாகச் சாடினார்.
மேலும், பேசிய அவர், “ஃபேஸ்புக்கில் நான் ஒரு ஜோக்கை வாசித்தேன். ஒரு சிறுவன் தனது அப்பாவிடம் கேட்கிறான்.. “Dad, Is Jio a Government Company?” என. அதற்கு அவனது தந்தை பதில் சொல்கிறார் : “No My dear son, This Government is Jio's Company!” என பா.ஜ.க அரசின் கார்ப்பரேட் நல கொள்கைகளைக் கடுமையாக விமர்சித்தார்.
Also Read
-
“ஏழை மாணவர்களின் பசி போக்கிய காலை உணவுத் திட்டம்.. திராவிட நாயகர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வை”
-
இது பற்றி பேசக்கூடாது என்றால் என்ன நியாயம்? : த.வெ.க அரசுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேள்வி!
-
“த.வெ.க ஆட்சியில் தொடர் கதையாகும் பாலியல் தொல்லைகள்” : அனிதா ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம்!
-
“சிங்கப்பெண் படை தொடக்கத்திற்கு பின்னும்.. தொடரும் பாலியல் குற்றங்கள்.. தூங்குகிறாரா முதல்வர் விஜய்!”
-
முதலமைச்சர் தொகுதியிலேயே... : பள்ளிக்குச் சென்ற சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்!