India
கொள்ளையடித்த ₹1 கோடியில், ₹1 லட்சத்தைக் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கிய திருட்டு கும்பல்: சிக்கியது எப்படி?
டெல்லி, ரோகினி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரின் ஊழியர்கள் இரண்டு பேர் ரூ.1.1 கோடி பணத்துடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை வழிமறித்த கும்பல் ஒன்று துப்பாக்கியைக் காட்டி அவர்களிடம் இருந்த பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியிலிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தபோது, கொள்ளையர்களின் அடையாளங்கள் கிடைத்துள்ளது. பின்னர் சம்பவம் நடந்து ஒருவாரம் கழித்து சாந்தினி சவுக் மார்கெட் பகுதியில் அந்த கும்பலை போலிஸார் கைது செய்தனர்.
பிறகு அவர்களிடம் விசாரணை செய்தபோது கொள்ளையடித்த பணத்திலிருந்து ரூ.1 லட்சத்தைக் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியதும் தெரியவந்துள்ளது. இதற்கான ஆதாரமும் சி.சி.டி.வி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் நகைக்கடை ஒன்றில் முன்னாள் ஊழியராக இருந்துள்ளார். தொழிலதிபர்களின் ஊழியர்கள் அந்த நகைக்கடையில் பணம் வாங்கிக் கொண்டு வருவது குறித்து இவர்தான் தனது கூட்டாளிகளுக்கு தெரிவித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Also Read
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!
-
தேசிய நெடுஞ்சாலைகளில் மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலையங்கள் : திமுக MP ராஜேஷ்குமார் வலியுறுத்தல்!