India
ஸ்பா வைத்து பாலியல் தொழில் செய்த ஓனருக்கு காப்பு மாட்டிய தானே போலிஸ்; 3 பெண்கள் மீட்பு!
தானே மாவட்டத்தில் உள்ள மீரா பயந்தர் பகுதியில் மசாஜ் செய்யும் ஸ்பா வைத்து நடத்தி வந்தவர் ஜேம்ஸ் ஹரகம்புங் (27).
அந்த ஸ்பா நிலையில் மசாஜ் செய்யும் போர்வையில் இளம்பெண்களை வைத்து ஆண்களிடம் பணம் பறிப்பதற்காக பாலியல் தொழிலில் ஜேம்ஸ் ஈடுபட்டு வந்ததாக மகாராஷ்டிராவின் மனித கடத்தல் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது.
இதனையடுத்து லத்தீஃப் பார்க் அருகே இருந்த அந்த ஸ்பா நிலையத்துக்குச் சென்று சோதனை நடத்திய போது மூன்று இளம்பெண்களை மீட்ட போலிஸார் உரிமையாளர் ஜேம்ஸை கைது செய்தனர்.
மேலும் மசாஜ் நிலையத்தை பூட்டி சீல் வைத்த போலிஸார் மேற்கொண்டு விசாரணையும் நடத்தியுள்ளனர். அதன்படி, இளம்பெண்களை கடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் வேலைகளிலும் ஜேம்ஸ் ஈடுபட இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
எனவே, இளம்பெண்களும், இளைஞர்களும் இதுபோன்ற மோசடி பேர்வழிகளிடம் ஏமாற வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
Also Read
-
“இன்றும் கழகத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் நாகூர் ஹனிபா” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
-
டென்ஷனா இருந்தா... VIBE WITH MKS நிகழ்ச்சியில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வடகிழக்கு பருவ மழையால் பாதித்த பயிர்கள்: ரூ.289.63 கோடி நிவாரண நிதி அறிவித்த அமைச்சர் MRK பன்னீர்செல்வம்
-
போராட்டம் வாபஸ் - 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
“எல்லாருக்கும் எல்லாம் என்ற கழக ஆட்சி தொடரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!