India
ஸ்பா வைத்து பாலியல் தொழில் செய்த ஓனருக்கு காப்பு மாட்டிய தானே போலிஸ்; 3 பெண்கள் மீட்பு!
தானே மாவட்டத்தில் உள்ள மீரா பயந்தர் பகுதியில் மசாஜ் செய்யும் ஸ்பா வைத்து நடத்தி வந்தவர் ஜேம்ஸ் ஹரகம்புங் (27).
அந்த ஸ்பா நிலையில் மசாஜ் செய்யும் போர்வையில் இளம்பெண்களை வைத்து ஆண்களிடம் பணம் பறிப்பதற்காக பாலியல் தொழிலில் ஜேம்ஸ் ஈடுபட்டு வந்ததாக மகாராஷ்டிராவின் மனித கடத்தல் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது.
இதனையடுத்து லத்தீஃப் பார்க் அருகே இருந்த அந்த ஸ்பா நிலையத்துக்குச் சென்று சோதனை நடத்திய போது மூன்று இளம்பெண்களை மீட்ட போலிஸார் உரிமையாளர் ஜேம்ஸை கைது செய்தனர்.
மேலும் மசாஜ் நிலையத்தை பூட்டி சீல் வைத்த போலிஸார் மேற்கொண்டு விசாரணையும் நடத்தியுள்ளனர். அதன்படி, இளம்பெண்களை கடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் வேலைகளிலும் ஜேம்ஸ் ஈடுபட இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
எனவே, இளம்பெண்களும், இளைஞர்களும் இதுபோன்ற மோசடி பேர்வழிகளிடம் ஏமாற வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
Also Read
-
“மாற்றம் எனச் சொல்லி.. அண்டப் புளுகை, ஆதவ் அர்ஜுனா புளுகாக மாற்றிவிட்டார்களோ?” : இ.பரந்தாமன் கண்டனம்!
-
ஒரே நாளில்... கோவையை தொடர்ந்து மதுரை.. கொலை நகரமாகும் தூங்கா நகரம்... வேடிக்கை பார்க்கும் தவெக அரசு!
-
விபரீதமான விளையாட்டு... வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 8 பள்ளி மாணவர்கள் கைது.. கள்ளக்குறிச்சியில் பரபர!
-
“ஒன்னு மின்வெட்டு, இரண்டு அரிவாள் வெட்டு.. இதான் தவெக ஆட்சி” : முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“வேங்கைவயல் விவகாரத்தில் நீலிக்கண்ணீர்... மன்னிப்புக் கேட்க தயாரா?” : வன்னி அரசுக்கு கோவி.செழியன் கேள்வி!