India
ஸ்பா வைத்து பாலியல் தொழில் செய்த ஓனருக்கு காப்பு மாட்டிய தானே போலிஸ்; 3 பெண்கள் மீட்பு!
தானே மாவட்டத்தில் உள்ள மீரா பயந்தர் பகுதியில் மசாஜ் செய்யும் ஸ்பா வைத்து நடத்தி வந்தவர் ஜேம்ஸ் ஹரகம்புங் (27).
அந்த ஸ்பா நிலையில் மசாஜ் செய்யும் போர்வையில் இளம்பெண்களை வைத்து ஆண்களிடம் பணம் பறிப்பதற்காக பாலியல் தொழிலில் ஜேம்ஸ் ஈடுபட்டு வந்ததாக மகாராஷ்டிராவின் மனித கடத்தல் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது.
இதனையடுத்து லத்தீஃப் பார்க் அருகே இருந்த அந்த ஸ்பா நிலையத்துக்குச் சென்று சோதனை நடத்திய போது மூன்று இளம்பெண்களை மீட்ட போலிஸார் உரிமையாளர் ஜேம்ஸை கைது செய்தனர்.
மேலும் மசாஜ் நிலையத்தை பூட்டி சீல் வைத்த போலிஸார் மேற்கொண்டு விசாரணையும் நடத்தியுள்ளனர். அதன்படி, இளம்பெண்களை கடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் வேலைகளிலும் ஜேம்ஸ் ஈடுபட இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
எனவே, இளம்பெண்களும், இளைஞர்களும் இதுபோன்ற மோசடி பேர்வழிகளிடம் ஏமாற வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
Also Read
-
5 ஆண்டுகளில் TNPSC, தேசிய நலவாழ்வு குழுமம் மூலம் 48,418 பேருக்கு பணி ஆணை:அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
அரசுக் கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 5 உதவிப் பேராசிரியர்கள் : பணி ஆணைகளை வழங்கிய முதலமைச்சர்!
-
சிலிண்டர் தட்டுப்பாடு... மின்சாரம் யூனிட்டிற்கு ரூ.2 மானியம்... சலுகைகளை அறிவித்த முதலமைச்சர்!
-
“100 கி.மீ தூரத்திற்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம்!” : கிருஷ்ணகிரியில் துணை முதலமைச்சர் உரை!
-
“தி.மு.க. செய்த சாதனை என்ன என்பதை மக்கள் சொல்வார்கள்!” : பிரதமர் மோடிக்கு முரசொலி தலையங்கம் பதிலடி!