India
கல்லூரிக்குச் சென்ற மாணவியை கடத்தி மிரட்டிய பா.ஜ.க MLA - பாட்னாவில் கொடூரம்!
பாட்னாவின் பூத்நாத் சாலையில் அமைந்துள்ள குடியிருப்புப் பகுதியில் வசிப்பவர் ரிஷிமா ராஜ். அவர் பிப்ரவரி 9ஆம் தேதி காலை 9 மணிக்கு வணிகவியல் கல்லூரிக்குச் சென்றிருந்தார். மதியம் 2 மணியளவில் திரும்பி வர வேண்டிய அவர் திரும்பி வராததால், அவரது தாயார் ரேகா குமாரி, ரிஷிமாவை போனில் தொடர்பு கொண்டார்.
அப்போது ரிஷிமாவின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்துள்ளது. இதனிடையே, 3.10 மணிக்கு ரிஷிமாவின் போனில் இருந்து ரேகாவுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் ஒரு தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த எண்ணைத் தொடர்பு கொண்டபோது, அதை பா.ஜ.க எம்.எல்.ஏ வினய் பிஹாரி எடுத்து பேசியுள்ளார். மேலும், ரேகாவை மிரட்டியுள்ளார். கடத்தப்பட்ட பெண், தனது மருமகன் ராஜீவ் சிங்கிடம் இருப்பதாகவும், எஸ்.பி அல்லது டி.எஸ்.பி -யிடம் சென்று எந்தப் பயனும் இல்லை என்றும் அவர் ரேகாவிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, ரேகா கொடுத்த புகாரின் பேரில், வினய் பிஹாரி மீது பாட்னா போலிஸார் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“ஒட்டுமொத்த இந்தியாவிற்கான தமிழ்நாட்டின் குரல்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
20 Volvo அதிநவீன குளிர்சாதன சொகுசு பேருந்துகள்! : சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
நயினார் நாகேந்திரனின் பொய் பரப்பல்! : திராவிட மாடலின் மத நல்லிணக்கத்தை விளக்கிய முரசொலி தலையங்கம்!
-
ரூ.74.70 கோடியில் சென்னை மாநகராட்சியின் புதிய மன்றக்கூடம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
சென்னையின் கலாச்சாரச் சின்னம் : புனரமைக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்!