India
கல்லூரிக்குச் சென்ற மாணவியை கடத்தி மிரட்டிய பா.ஜ.க MLA - பாட்னாவில் கொடூரம்!
பாட்னாவின் பூத்நாத் சாலையில் அமைந்துள்ள குடியிருப்புப் பகுதியில் வசிப்பவர் ரிஷிமா ராஜ். அவர் பிப்ரவரி 9ஆம் தேதி காலை 9 மணிக்கு வணிகவியல் கல்லூரிக்குச் சென்றிருந்தார். மதியம் 2 மணியளவில் திரும்பி வர வேண்டிய அவர் திரும்பி வராததால், அவரது தாயார் ரேகா குமாரி, ரிஷிமாவை போனில் தொடர்பு கொண்டார்.
அப்போது ரிஷிமாவின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்துள்ளது. இதனிடையே, 3.10 மணிக்கு ரிஷிமாவின் போனில் இருந்து ரேகாவுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் ஒரு தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த எண்ணைத் தொடர்பு கொண்டபோது, அதை பா.ஜ.க எம்.எல்.ஏ வினய் பிஹாரி எடுத்து பேசியுள்ளார். மேலும், ரேகாவை மிரட்டியுள்ளார். கடத்தப்பட்ட பெண், தனது மருமகன் ராஜீவ் சிங்கிடம் இருப்பதாகவும், எஸ்.பி அல்லது டி.எஸ்.பி -யிடம் சென்று எந்தப் பயனும் இல்லை என்றும் அவர் ரேகாவிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, ரேகா கொடுத்த புகாரின் பேரில், வினய் பிஹாரி மீது பாட்னா போலிஸார் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
நீதித்துறையில் ஊழல் : NCERT 8 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் வெடித்த சர்ச்சை!
-
‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ புதிய உயரங்களை அடைவதில் பெருமிதம் கொள்வோம்!: முதலமைச்சர் நெகிழ்ச்சிப் பதிவு!
-
“மனிதநேயமிக்கவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : நடிகர் விஜய் ஆண்டனி புகழாரம்!
-
”இது நம்ம ஆட்டம் 2026”- மாநில அளவில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கிய துணை முலமைச்சர் உதயநிதி
-
உலகளவில் முதன்முறையாக.. மெட்ரோ சுரங்கப்பாதைக்கு மேல் கட்டப்பட்டு மேம்பாலம்! - அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!