India
கல்லூரிக்குச் சென்ற மாணவியை கடத்தி மிரட்டிய பா.ஜ.க MLA - பாட்னாவில் கொடூரம்!
பாட்னாவின் பூத்நாத் சாலையில் அமைந்துள்ள குடியிருப்புப் பகுதியில் வசிப்பவர் ரிஷிமா ராஜ். அவர் பிப்ரவரி 9ஆம் தேதி காலை 9 மணிக்கு வணிகவியல் கல்லூரிக்குச் சென்றிருந்தார். மதியம் 2 மணியளவில் திரும்பி வர வேண்டிய அவர் திரும்பி வராததால், அவரது தாயார் ரேகா குமாரி, ரிஷிமாவை போனில் தொடர்பு கொண்டார்.
அப்போது ரிஷிமாவின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்துள்ளது. இதனிடையே, 3.10 மணிக்கு ரிஷிமாவின் போனில் இருந்து ரேகாவுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் ஒரு தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த எண்ணைத் தொடர்பு கொண்டபோது, அதை பா.ஜ.க எம்.எல்.ஏ வினய் பிஹாரி எடுத்து பேசியுள்ளார். மேலும், ரேகாவை மிரட்டியுள்ளார். கடத்தப்பட்ட பெண், தனது மருமகன் ராஜீவ் சிங்கிடம் இருப்பதாகவும், எஸ்.பி அல்லது டி.எஸ்.பி -யிடம் சென்று எந்தப் பயனும் இல்லை என்றும் அவர் ரேகாவிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, ரேகா கொடுத்த புகாரின் பேரில், வினய் பிஹாரி மீது பாட்னா போலிஸார் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
சமூகநீதித் தேரைப் பின்னுக்குத் தள்ளுவதா? : விஜய்க்கு தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கேள்வி!
-
“தமிழோடு விளையாடியவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை” : தமிழ்த்தாய் வாழ்த்து அவமரியாதை - திமுக கண்டனம்
-
ராமநாதபுரத்தில் பரபரப்பு : ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்ட சார்பதிவாளர் கையும் களவுமாகக் கைது!
-
”CSK நிர்வாகத்திற்கும் தோனிக்கும் பிரச்சனையா.. அஸ்வின் கிளப்பிய புதிய புயல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!”
-
ஓடி ஒளியாதீர்கள் CM Sir : மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு - கனிமொழி என்.வி.என்.சோமு கண்டனம்!