India
பெற்றோர்களே உஷார்.. குழந்தையைத் தூக்கி வீசிய பராமரிப்பாளர்: குஜராத்தில் அதிர்ச்சி!
குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்தவர் மித்தேஷ் பட்டேல். இவரும் அவரது மனைவியும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இதனால் தங்களுக்குப் பிறந்த இரட்டை குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்காகக் கடந்த செப்டம்பர் மாதம் பராமரிப்பாளர் ஒருவரை நியமித்துள்ளார்.
இதையடுத்து வீட்டில் சி.சி.டி.வி காட்சிகளை பட்டேல் பொருத்தியுள்ளார். இந்நிலையில் நேற்று வேலைக்குச் சென்ற பட்டேலுக்கு அவரது தாயாரிடம் இருந்து தொலைப்பேசி அழைப்பு வந்துள்ளது. அப்போது அவர் "குழந்தை ஒன்று அழுது கொண்டே இருக்கும் போது மயங்கி விழுந்து விட்டதாக" கூறியுள்ளார்.
பின்னர் உடனே பட்டேல் வீட்டிற்குச் சென்று குழந்தையைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், மூளையில் காயம் ஏற்பட்டுள்ளது என்று கூறினர்.
இதைக்கேட்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் குழந்தைக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் வீட்டிற்கு வந்த பட்டேல் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார்.
அப்போது, குழந்தை பராமரிப்பாளர், பாதிக்கப்பட்ட குழந்தையின் காதை திருகி அடித்துத் துன்புறுத்துவதுடன், குழந்தையைப் படுக்கையில் தூக்கி வீசும் காட்சிகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இந்த ஆதாரங்களைக் கொண்டு அவர் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் விரக்த்தியில் குழந்தையை அடுத்து கொடுமைப் படுத்தியுள்ளதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!
-
“சொத்துவரி உயர்வு.. சென்னை மக்கள் தலையில் பேரிடி” : முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம்!