India
இளம்பெண்ணின் பிறப்புறுப்பில் Corona Sample எடுத்த ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறை.. தீர்ப்பின் பின்னணி என்ன?
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் உள்ள ஷாப்பிங் மாலில் உள்ள பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு பணியாற்றிய ஊழியர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் என நிர்வாகம் கூறியுள்ளது.
இதனையடுத்து அங்கு பணியாற்றிய இளம்பெண் ஒருவர் அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா பரிசோதனைக்குச் சென்றுள்ளார். அங்கிருந்த லேப் டெக்னீஷியன் முதலில் அப்பெண்ணுக்கு மூக்கு மற்றும் தொண்டை பகுதியில் கொரோனா மாதிரி எடுத்துள்ளார்.
அதன்பின்னர் கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை முழுமையாக தெரிந்துகொள்ள பிறப்புறுப்பில் மாதிரி எடுக்கவேண்டும் எனக் கூறியுள்ளார். முதலில் அதிர்ச்சியடைந்த இளம்பெண் பின்னர் வேறு வடியில்லாமல் மாதிரி எடுக்க சம்மதித்தார்.
இந்நிலையில் இதுதொடர்பாக தனது சகோதரரிடம் கூறியுள்ளார். சகோதரர் அதிர்ச்சியடைந்து தெரிந்த மருத்துவர் ஒருவரை அணுகி இதுதொடர்பாக விளக்கியபோது, மருத்துவர் மூக்கு மற்றும் தொண்டை பகுதியில் மட்டும்தான் எடுக்கவேண்டும் என்றும் வேறு எங்கேயும் எடுக்கக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அந்தப் பெண், போலிஸில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டது. மருத்துவமனை ஊழியரின் இந்தச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
கனவுகள் கொண்ட இளைஞர்களுக்கு... “என் கனவு என் எதிர்காலம்” என்ற புதிய இணையதளம் தொடக்கம்!
-
திராவிட மாடலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் 10,000 முகாம்கள் நடத்தி சாதனை! - முழு விவரம் உள்ளே!
-
“தமிழ்நாட்டிற்கு 11 ஆண்டுகளாக சிறப்புத் திட்டங்களை அறிவிக்காமல் பாஜக வஞ்சிக்கிறது!” : முதலமைச்சர் உரை!
-
விழுப்புரம் மக்களுக்காக... ரூ.688.48 கோடியில் நலத்திட்ட உதவிகள்... அசத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு பா.ஜ.க அரசு ஏன் அஞ்சுகிறது? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!