India
இளம்பெண்ணின் பிறப்புறுப்பில் Corona Sample எடுத்த ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறை.. தீர்ப்பின் பின்னணி என்ன?
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் உள்ள ஷாப்பிங் மாலில் உள்ள பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு பணியாற்றிய ஊழியர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் என நிர்வாகம் கூறியுள்ளது.
இதனையடுத்து அங்கு பணியாற்றிய இளம்பெண் ஒருவர் அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா பரிசோதனைக்குச் சென்றுள்ளார். அங்கிருந்த லேப் டெக்னீஷியன் முதலில் அப்பெண்ணுக்கு மூக்கு மற்றும் தொண்டை பகுதியில் கொரோனா மாதிரி எடுத்துள்ளார்.
அதன்பின்னர் கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை முழுமையாக தெரிந்துகொள்ள பிறப்புறுப்பில் மாதிரி எடுக்கவேண்டும் எனக் கூறியுள்ளார். முதலில் அதிர்ச்சியடைந்த இளம்பெண் பின்னர் வேறு வடியில்லாமல் மாதிரி எடுக்க சம்மதித்தார்.
இந்நிலையில் இதுதொடர்பாக தனது சகோதரரிடம் கூறியுள்ளார். சகோதரர் அதிர்ச்சியடைந்து தெரிந்த மருத்துவர் ஒருவரை அணுகி இதுதொடர்பாக விளக்கியபோது, மருத்துவர் மூக்கு மற்றும் தொண்டை பகுதியில் மட்டும்தான் எடுக்கவேண்டும் என்றும் வேறு எங்கேயும் எடுக்கக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அந்தப் பெண், போலிஸில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டது. மருத்துவமனை ஊழியரின் இந்தச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!