India
கிணற்றில் குதித்த மனைவி.. காப்பாற்ற முயன்ற கணவன் உயிரிழப்பு: நடந்தது என்ன?
மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் அடுத்த புடிபோரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சரியான நேரத்திற்கு உணவு சமைக்காததால் கணவன் தனது மனைவியைக் கடுமையாகத் திட்டியுள்ளார்.
இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனவேதனையடைந்த மனைவி வீட்டின் அருகே இருந்து கிணற்றில் குதித்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கணவரும் அதே கிணற்றில் குதித்துள்ளார்.
இதையடுத்து அப்பகுதி மக்கள் கணவன் மனைவி இருவரும் கிணற்றில் குதித்ததைப் பார்த்து அவர்களை உடனே மீட்கும் நடவடிக்கையில் இறங்கினர். இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
பின்னர், அங்கு வந்த போலிஸார் அப்பகுதி மக்கள் உதவியுடன் கிணற்றில் குதித்த இருவரையும் மீட்க முயன்றனர். இதில் கிணற்றிலிருந்த குழாயைப் பிடித்துக் கொண்டதால் மனைவி உயிருடன் மீட்கப்பட்டார்.
ஆனால், மனைவியைக் காப்பாற்றுவதற்காகக் கிணற்றில் குதித்த அவரது கணவர் நீரில் மூழ்கியதால் அவரை சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!