India
தூசிக்கு போரா? துண்டு அவிழ்ந்தும் சண்டையை நிறுத்தாத DSP.. இந்தூரில் பரபரப்பு; வைரலாகும் CCTV வீடியோ
மத்திய பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் உள்ள உஜ்ஜெயின் லோக் ஆயுக்தா பகுதியில் காவல்துறை டி.எஸ்.பியாக பணியாற்றி வருகிறார் வேதாந்த் ஷர்மா. இவரது வீடு லக்ஷ்யா விஹார் காலனியில் உள்ளது.
வேதாந்த் ஷர்மாவின் அண்டை வீட்டார் சந்தீப் விஜ். இவர் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியாவார். சில நாட்களாக சந்தீப் தனது வீட்டை புணரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அவர் வீட்டில் இருந்து வெளியே நிறுத்தப்பட்டுள்ள டிஎஸ்பியின் விலையுயர்ந்த பி.எம்.டபிள்யூ கார் மீது தூசு விழுவது வாடிக்கையாகியிருக்கிறது.
இதனால் சந்தீப் வீட்டு பணியாளர்களிடம் வேதாந்த் ஷர்மா வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதுபோக சந்தீப் மீது வழக்கும் தொடர்ந்திருக்கிறார். இதனை அறிந்த சந்தீப் இந்த விவகாரத்தில் சமாதானம் பேச டிஎஸ்பியை அணுகியிருக்கிறார்.
அப்போது இருவரும் வீட்டு வாசலில் இருந்து பேசிக் கொண்டிருந்த போது வாக்குவாதம் முற்றியிருக்கிறது. இதனையடுத்து சந்தீப்பை டிஎஸ்பி தாக்கியிருக்கிறார். பதிலுக்கு சந்தீப்பும் அவரை தாக்கியிருக்கிறார்.
இந்த தாக்குதலில் டிஎஸ்பி வேதாந்த் ஷர்மா இடுப்பில் கட்டியிருந்த துண்டு அவிழ்ந்து விழ அந்நேரம் சந்தீப் எஸ்கேப் ஆகியிருக்கிறார். பின்னர் துண்டை சரிசெய்துக் கொண்டு குச்சியோடு சந்தீப்பை துரத்திச் சென்றிருக்கிறார் டி.எஸ்.பி.
இந்த நிகழ்வுகள் அனைத்தும் அப்பகுதியில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருக்கிறது. டிசம்பர் 25ம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. தூசு விழுந்ததற்காக டிஎஸ்பியின் இந்த செயல் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
Also Read
-
“ஒயிட் வாஷான ஆப்கானிஸ்தான்.. கடைசி ஆட்டத்தில் ரோகித், ஜெய்ஸ்வால் அதிரடி” - முழுத் தகவல் உள்ளே!
-
“CBSE பள்ளிகளுக்கு NOC சான்றிதழ்.. சட்டம் தெரியுமா? தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கூறும் பொய்!”
-
உணவுக்குப் பதில் பிஸ்கட் : காலை உணவு திட்டத்தில் அலட்சியம் காட்டும் த.வெ.க அரசு!
-
“நான் முதல்வன் திட்டத்தை முடக்குவது இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயல்” : மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
பேரவை நேரலை இருட்டடிப்பு: “இதுவும் பாசிச நடவடிக்கையே” - சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கடிதம்!