India
8ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. வீடியோ எடுத்து மிரட்டிய லாரி டிரைவர் : போக்சோவில் கைது!
ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பக்கத்து வீட்டில் வசிக்கும் 8ஆம் வகுப்பு சிறுமியை வீட்டிற்கு அழைத்துள்ளார். இவர் தெரிந்தவர் என்பதால் அச்சிறுமியும் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அதை வீடியோ எடுத்து, இதை வெளியே சொன்னால் வீடியோவை வெளியிட்டுவிடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் தெரிவிக்காமல் இருந்துவந்தார். இதையடுத்து லாரி ஓட்டுநர் அந்த வீடியோவை தனது நண்பர்களுக்குப் பகிர்ந்துள்ளார்.
இதை அந்த நண்பர்கள் தங்களின் நண்பர்களுக்கு அனுப்பியுள்ளனர். இதைப்பார்த்த அப்பகுதி இளைஞர்கள் இதுகுறித்து சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த வீடியோவைப் பார்த்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
Also Read
-
5 ஆண்டுகளில் TNPSC, தேசிய நலவாழ்வு குழுமம் மூலம் 48,418 பேருக்கு பணி ஆணை:அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
அரசுக் கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 5 உதவிப் பேராசிரியர்கள் : பணி ஆணைகளை வழங்கிய முதலமைச்சர்!
-
சிலிண்டர் தட்டுப்பாடு... மின்சாரம் யூனிட்டிற்கு ரூ.2 மானியம்... சலுகைகளை அறிவித்த முதலமைச்சர்!
-
“100 கி.மீ தூரத்திற்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம்!” : கிருஷ்ணகிரியில் துணை முதலமைச்சர் உரை!
-
“தி.மு.க. செய்த சாதனை என்ன என்பதை மக்கள் சொல்வார்கள்!” : பிரதமர் மோடிக்கு முரசொலி தலையங்கம் பதிலடி!