India
தப்பிச் சென்ற கொலைக் குற்றவாளி.. சுட்டுப்பிடித்த போலிஸ் : பெங்களூருவில் நடந்தது என்ன?
கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் மனித உரிமைகள் பாதுகாப்பு ஆர்வலராகவும், ஊழல் இல்லா அமைப்பின் தலைவராகவும் இருந்தார். இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி ஸ்ரீதர் தனது காரில் சென்றுகொண்டிருந்தபோது, அவரைப் பின்தொடர்ந்து வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை வழி மறைத்து கொலை செய்தது.
இந்தக் கொலை சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். பின்னர் ரெட்டி நகரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ரகு என்பவரை போலிஸார் கைது செய்தனர். அப்போது ரகு முன்விரோதம் காரணமாகக் கொலை செய்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.
மேலும் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் ஹெண்ணூர் நெடுஞ்சாலையில் பதுக்கிவைத்திருப்பதாகக் போலிஸாரிடம் ரகு கூறினார். இதையடுத்து போலிஸார் ரகுவை அழைத்து அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது திடீரென ரகு போலிஸாரை தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றார்.
இதைப்பார்த்த காவல் ஆய்வாளர் வசந்தகுமார் ரகுவை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் ரகுவுக்கு குண்டடிபட்டு கீழே விழுந்தார். உடனே அவரை போலிஸார் பிடித்தனர். பின்னர் ரகுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!