India
மத்திய பிரதேச அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து.. 4 குழந்தைகள் பலி: விபத்திற்கான காரணம் என்ன?
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கமலா நேரு அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் 40 பேர் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்துள்ளது. இது பற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் விபத்தில் சிக்கிய 36 குழந்தைகளைப் பத்திரமாக மீட்டனர். ஆனால் 4 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தன.
பிறகு 13 தீயணைப்பு வாகனங்கள் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தை பெரும் போராட்டத்திற்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதை அறிந்த அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு இரங்கள் தெரிவித்துள்ளார்.
மேலும், உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் நிதி அறிவித்துள்ளார். தீ விபத்து குறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
கலவரம் செய்ய துடிக்கும் கயவர்களுக்குத் துணை போவது வெட்கக்கேடு : பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி கண்டனம்!
-
மதக் கலவரத்தைத் தூண்டுவதா? - உயர்நீதிமன்ற நீதிபதியே துணை போவதா? : ஆசிரியர் கி.வீரமணி ஆவேசம்!
-
தமிழ்நாட்டை வஞ்சிக்கிற போக்கு தொடருமேயானால்... : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!
-
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
-
“அமைதியும் எளிமையுமிக்கவர்... திரைப்பாசம் குடும்ப பாசமானது..” - AVM சரவணன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!