India
சக வீரர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற CRPF வீரர்... நால்வர் பலி.. சத்தீஸ்கரில் நடந்தது என்ன?
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்திற்குட்பட்ட லிங்காலபள்ளி கிராமத்தில் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப்படை (CRPF) 50 பட்டாலியன் முகாம் உள்ளது.
இந்த முகாமில் நேற்று அதிகாலை ரீத்தேஷ் ரஞ்சன் என்ற வீரர் திடீரென துப்பாக்கியை எடுத்து கண்மூடித்தனமாக சக வீரர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதில் நான்கு வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும் காயத்துடன் இருந்து மூன்று வீரர்களை மீட்டு விமானம் மூலம் ராய்ப்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இறந்தவர்களில் ராஜிப் மொண்டல், தன்ஜி, ராஜ்மணி என மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்தக் கொடூரம் சம்பவம் அறிந்த உயரதிகாரிகள் அங்கு சென்று ரீத்தேஷ் ரஞ்சனை கைது செய்தனர். மேலும் அவரிடம் நடத்தி விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மன அழுத்தம் காரணமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியது தெரியவந்துள்ளது.
Also Read
-
“இன்னொரு நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதை அமெரிக்காவும் இஸ்ரேலும் எப்போது நிறுத்தும்?”: முரசொலி காட்டம்!
-
100 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள் இயக்கம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
-
உலக தரத்தில் ரூ.20 கோடியில் ஆர்.கே.நகர் விளையாட்டு வளாகம் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
பள்ளி கட்டடம் முதல் பேருந்து நிலையம் வரை : சென்னையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த துணை முதலமைச்சர்!
-
“இது எண்ணிக்கைக்கான கூட்டணி அல்ல! எண்ணத்தால் உருவாக்கப்பட்டுள்ள கூட்டணி!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!