India
சக வீரர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற CRPF வீரர்... நால்வர் பலி.. சத்தீஸ்கரில் நடந்தது என்ன?
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்திற்குட்பட்ட லிங்காலபள்ளி கிராமத்தில் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப்படை (CRPF) 50 பட்டாலியன் முகாம் உள்ளது.
இந்த முகாமில் நேற்று அதிகாலை ரீத்தேஷ் ரஞ்சன் என்ற வீரர் திடீரென துப்பாக்கியை எடுத்து கண்மூடித்தனமாக சக வீரர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதில் நான்கு வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும் காயத்துடன் இருந்து மூன்று வீரர்களை மீட்டு விமானம் மூலம் ராய்ப்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இறந்தவர்களில் ராஜிப் மொண்டல், தன்ஜி, ராஜ்மணி என மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்தக் கொடூரம் சம்பவம் அறிந்த உயரதிகாரிகள் அங்கு சென்று ரீத்தேஷ் ரஞ்சனை கைது செய்தனர். மேலும் அவரிடம் நடத்தி விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மன அழுத்தம் காரணமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியது தெரியவந்துள்ளது.
Also Read
-
“பாஜகவிடம் அடிமையாக அதிமுக இருப்பதற்கான காரணம் இதுதான்...” - தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி. பேச்சு!
-
பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைக்கும் ‘அன்புக்கரங்கள்’ திட்டம் - புதிய திட்டத்தின் சிறப்பு என்ன?
-
“இது என்ன, வாக்கரசியலுக்காக செய்வதா?” : ‘அன்புக்கரங்கள்’ திட்ட தொடக்க விழாவில் முதலமைச்சர் பதிலடி!
-
“IPL போல அதிமுகவில் APL போட்டி நடத்தலாம்” - அதிமுகவின் பல அணிகளை குறிப்பிட்டு துணை முதலமைச்சர் கிண்டல்!
-
“விஸ்வகுரு, விசுவாசம் இல்லாத குருவாகக் காட்டிக் கொண்டுவிட்டார்” - மோடியை விமர்சித்த முரசொலி தலையங்கம்!