India
தலைகுனிந்து 30 வினாடி மவுனம்.. புனீத் நினைவிடத்தில் கண்ணீர் விட்டு அழுத நடிகர் சூர்யா !
கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த புனீத் ராஜ்குமார் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு சினிமா ரசிகர்கள் மற்றும் இந்திய திரைப் பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவரது மறைவுக்கு ரசிகர்கள், பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து புனீத் ராஜ்குமார் உடல் காண்டீவராவில் உள்ள அவரது தந்தை நினைவிடத்திற்கு அருகிலேயே அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, பிரபு உள்ளிட்டோர் புனீத் ராஜ்குமார் நினைவிடத்தில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்நிலையில் நடிகர் சூர்யா இன்று புனீத் ராஜ்குமார் நினைவிடத்தில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். அப்போது 20 நிமிடம் தலைகுனிந்த நடிகர் சூர்யா, கண்ணீர்விட்டு அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சூர்யா, “இப்படி நடந்திருக்கவே கூடாது. எங்கள் இருவர் குடும்பமும் நெருக்கமான நண்பர்களாக இருந்தோம். என் அம்மா வயிற்றில் நான் 4 மாதக் குழந்தையாக இருந்தபோது புனீத் அவர் அம்மா வயிற்றில் 7 மாதக் குழந்தையாக இருந்தார் என்று எனக்கு என் அம்மா சொன்னது நினைவில் இருக்கிறது.
புனீத்துக்கு இப்படி நடந்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சமூகத்துக்கு அவர் செய்த அற்புதமான விஷயங்களை கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் குடும்பத்தினர், நலம் விரும்பிகளுக்கு ஆறுதலையும், இதைத் தாங்கும் மன உறுதியும் தரவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். அதன்பின்னர் புனீத் ராஜ்குமார் இல்லத்திற்கு சென்ற நடிகர் சூர்யா, அவரது குடும்ப உறுப்பினர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
Also Read
-
“அமலாக்கத்துறை நடத்தும் அவதூறுப் பிரச்சாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன்” : அமைச்சர் கே.என்.நேரு பதிலடி!
-
தேசிய நீர் & நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள்.. முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர்கள் வாழ்த்து!
-
23 சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்.. கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
-
ரூ.98.92 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் திறப்பு : 68,300 மீனவர்கள் பயன்!
-
கள்ளக்குறிச்சி : பெற்றோரை இழந்துவாடும் 4 குழந்தைகளையும் அரவணைத்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!