India
“ஊழலில் மிதக்கும் பா.ஜ.க அரசு.. ரூ.300 கோடி பேரம்” : புயலைக் கிளப்பும் மேகாலயா ஆளுநர்!
மேகாலயா ஆளுநராக இருப்பவர் சத்ய பால் மாலிக். இவர் முன்னதாக ஜம்மு காஷ்மீரின் ஆளுநராக இருந்தார். பிறகு சில மாதம் கோவாவின் ஆளுநராக இருந்துள்ளார்.
இந்நிலையில், கோவா அரசு மீது ஆளுநர் சத்ய பால் ஊழல் குற்றச்சாட்டு வைத்துப் பேசியிருப்பது பா.ஜ.க வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்குப் பேட்டியளித்த மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக், "ஜம்மு - காஷ்மீர் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டபோது ஊழல் நிறைந்த சில கோப்புகளை அழிக்குமாறு கூறினார்கள். ஆனால் நான் அதை மறுத்தேன்.
அதேபோல், அம்பானி தொடர்பான கோப்புக்கும், ஆர்.எஸ்.ஸ் சார்ந்த நபரின் கோப்புக்கும் அனுமதி கொடுத்தால் தலா 300 கோடி ரூபாய் கொடுப்பதாக எனது செயலாளரிடம் பேரம் பேசப்பட்டது. இதை தட்டிக் கேட்டதால் என்னை ஜம்மு - காஷ்மீரிலிருந்து மாற்றினார்கள்.
கோவா மாநிலத்தில் ஆளுநராக இருந்தபோது பா.ஜ.க அரசின் ஊழலைக் கேள்வி எழுப்பினேன். கோவாவில் பா.ஜ.க அரசு எதைச் செய்தாலும் அதில் ஊழல் இருக்கும். இந்த ஊழலை வெளிக் கொண்டு வந்ததால் நான் அங்கிருந்தும் மாற்றப்பட்டேன் என தெரிவித்துள்ளார்.
ஆளுநர் சத்ய பால் மாலிக்கின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஊழல் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும், கோவா முதல்வர் பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Also Read
-
அசாம் பா.ஜ.க.வின் வெளிப்படையான வெறுப்பு! : இஸ்லாமியர்களை அச்சுறுத்துவதற்காக தண்டனை இல்லையா?
-
“தமிழ்நாட்டுக்கான இரயில்வே திட்டங்கள் : தலையிட்டு தீர்வு காணவேண்டும்” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
“பாசிச சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற இளைஞர் அணி எப்போதும் தயார்” : துணை முதலமைச்சர் உதயநிதி !
-
கன்னியாகுமரி to சென்னை.. 6 நாட்கள் மகளிர் விடியல் பேருந்துகளில் பயணம்... பிரமிக்க வைத்த 2 பெண்கள்!
-
பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஜீரோ சொன்ன பாஜகவுக்கு தேர்தலில் ஜீரோதான் கிடைக்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்!