India
“காவி சால்வை அணிந்து விஜயதசமியை கொண்டாடிய காவலர்கள்” : உ.பியாக மாறும் கர்நாடகா - பின்னணி என்ன?
கர்நாடகா மாநிலத்தில் ஆண்டுதோறும் விஜயதசமி பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் விஜயபுரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆனந்த் குமார் தலைமையில், பணியாற்றும் காவலர்கள் அனைவரும் காவல் நிலையத்தில் விஜயதசமி பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.
அப்போது, போலிஸார் அனைவரும் வெள்ளை பைஜாமா குர்த்தா மற்றும் காவி நிற சால்வைகளை அணிந்திருந்தனர். இந்த உடையுடன் போலிஸார் குழுப் புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்து அமைப்பினரைப் போல் போலிஸார் எப்படிக் காவி நிறத்திலான சால்வை அணிந்தனர் என பலரும் சமூகவலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அதேபோல், காவி நிற சால்வை அணிந்து மறைமுகமாக பா.ஜ.கவின் சர்வாதிகார ஆட்சிக்கு கர்நாடக போலிஸார் துணையாக இருக்கிறார்களா என கேள்வி எழுப்பி, எப்படி இவர்கள் நடுநிலையுடன் செயல்படுவார்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Also Read
-
”தமிழ்நாடு போராடும்... தமிழ்நாடு வெல்லும்” : ஆர்.என்.ரவி கேள்விக்கு நெத்தியடி பதில் தந்த முரசொலி!
-
2 கட்டங்களாக நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தல்... தேர்தல் ஆணையம் அறிவிப்பு !
-
தீபாவளி பண்டிகை : தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் உள்ளிட்ட 20,378 பேருந்துகள் இயக்க முடிவு !
-
BB SEASON 9 : "ஒரு நாள் மேல தாங்க மாட்டாரு?" - Watermelon திவாகரை டார்கெட் செய்யும் சக போட்டியாளர்கள்!
-
"தலைமை நீதிபதி மீதான தாக்குதல் சமூகத்தின் ஆதிக்க மனப்பான்மையை காட்டுகிறது" - முதலமைச்சர் கண்டனம் !