India
“காவி சால்வை அணிந்து விஜயதசமியை கொண்டாடிய காவலர்கள்” : உ.பியாக மாறும் கர்நாடகா - பின்னணி என்ன?
கர்நாடகா மாநிலத்தில் ஆண்டுதோறும் விஜயதசமி பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் விஜயபுரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆனந்த் குமார் தலைமையில், பணியாற்றும் காவலர்கள் அனைவரும் காவல் நிலையத்தில் விஜயதசமி பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.
அப்போது, போலிஸார் அனைவரும் வெள்ளை பைஜாமா குர்த்தா மற்றும் காவி நிற சால்வைகளை அணிந்திருந்தனர். இந்த உடையுடன் போலிஸார் குழுப் புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்து அமைப்பினரைப் போல் போலிஸார் எப்படிக் காவி நிறத்திலான சால்வை அணிந்தனர் என பலரும் சமூகவலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அதேபோல், காவி நிற சால்வை அணிந்து மறைமுகமாக பா.ஜ.கவின் சர்வாதிகார ஆட்சிக்கு கர்நாடக போலிஸார் துணையாக இருக்கிறார்களா என கேள்வி எழுப்பி, எப்படி இவர்கள் நடுநிலையுடன் செயல்படுவார்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!