India
“காவி சால்வை அணிந்து விஜயதசமியை கொண்டாடிய காவலர்கள்” : உ.பியாக மாறும் கர்நாடகா - பின்னணி என்ன?
கர்நாடகா மாநிலத்தில் ஆண்டுதோறும் விஜயதசமி பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் விஜயபுரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆனந்த் குமார் தலைமையில், பணியாற்றும் காவலர்கள் அனைவரும் காவல் நிலையத்தில் விஜயதசமி பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.
அப்போது, போலிஸார் அனைவரும் வெள்ளை பைஜாமா குர்த்தா மற்றும் காவி நிற சால்வைகளை அணிந்திருந்தனர். இந்த உடையுடன் போலிஸார் குழுப் புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்து அமைப்பினரைப் போல் போலிஸார் எப்படிக் காவி நிறத்திலான சால்வை அணிந்தனர் என பலரும் சமூகவலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அதேபோல், காவி நிற சால்வை அணிந்து மறைமுகமாக பா.ஜ.கவின் சர்வாதிகார ஆட்சிக்கு கர்நாடக போலிஸார் துணையாக இருக்கிறார்களா என கேள்வி எழுப்பி, எப்படி இவர்கள் நடுநிலையுடன் செயல்படுவார்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Also Read
-
திருப்பரங்குன்றம் விவகாரம் : ‘‘பியூஷ் கோயலின் ‘பியூஸ்’ போன வாதங்கள்...” - முரசொலி தலையங்கம்!
-
புத்தகக் கண்காட்சிகள் எழுத்தாளர்களுக்கு மட்டுமானது அல்ல அனைவருக்கும் சொந்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இதுதான் அமித்ஷாவின் வேலையா?”: ED ரெய்டுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்!
-
1.91 கோடி குடும்பங்களின் கனவை நனவாக்க... “உங்க கனவ சொல்லுங்க” திட்டம்! : நாளை (ஜன.9) முதல் தொடக்கம்!
-
Umagine TN 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு : ரூ.9,820 கோடி முதலீடு - 4250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!