India
“சுதந்திரத்திற்கு போராடாத பா.ஜ.க கும்பல் ‘தேசபக்தி’ பற்றி பேசத் தகுதியில்லை” : உத்தவ் தாக்கரே சாடல்!
மகாராஷ்டிராவில் நடைபெற்ற தசரா நிகழ்ச்சியை அம்மாநில முதல்வரும் சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே காணொளி வாயிலாக விழாவைத் தொடங்கிவைத்து உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் தோல்வி அடைந்த பா.ஜ.க தற்போது, மகாராஷ்டிராவின் பெருமைகளை களங்கப்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. மாநில போலிஸார் இதுவரை 150 கோடி மதிப்பிலான போதைப் பொருளை பறிமுதல் செய்துள்ள நிலையில், பிரபலங்களின் கைதில் மட்டும் பா.ஜ.க கவனம் செலுத்தி வருகிறது. இதற்கு பின்னால் உள்நோக்கம் உள்ளது. முந்த்ரா துறைமுகம் எங்குள்ளது, அங்கு பறிமுதல் செய்யப்பட்ட கோடிக்க ணக்கான ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் எங்கே?
குறிப்பாக, பலமுறை ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்தும் அவர்களால், ஒன்றும் செய்யமுடிவில்லை. எங்களது அரசு அடுத்த மாதம் 2 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. முடிந்தால் ஆட்சியைக் கவிழ்த்துப் பாருங்கள். முன்னால் நின்று நேருக்கு நேராக மோதுங்கள். மாறாக, அமலாக்கத்துறை போன்ற ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்தி எங்கள் கூட்டணி கட்சிகளுக்கு பா.ஜ.க சவால் விடக்கூடாது.
இந்துத்துவா மற்றும் மதத்தின் பெயரை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது பிரிட்டிஷ் பிரிவினைவாத கொள்கையை கையில் எடுத்துள்ளனர். பா.ஜ.க விடுதலை போராட்டத்தில் எதையும் செய்யவில்லை. பாரத் மாதாகி ஜெய், வந்தே மாதரம் என முழங்குவதால் மட்டும் பா.ஜ.க, எல்லை காக்கும் போர் வீரனைவிட தேசப்பற்று மிக்கவராக மாறிவிட முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”MI-யுடன் CSK தோற்றால் பிளே ஆப் வாய்ப்பு என்னாகும்? காத்திருக்கும் CSK ரசிகர்கள்” : முழு விவரம்!
-
மோடி அரசின் தேர்தலுக்கான பரிசு இது : எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு ராகுல் காந்தி எம்.பி கண்டனம்!
-
”கிடு கிடு விலை உயர்வில் சிலிண்டர்கள்.. 5 மாநில தேர்தல் முடிந்ததும் ஆட்டம் தொடக்கம்” : முழு விவரம் அறிக!
-
”சூடான வெப்பத்திற்கு இடையே வந்த மழை அறிவிப்பு.. எப்போது தொடங்கும் தென்மேற்கு பருவமழை” : முழு விவரம்!
-
“மே 4ஆம் தேதி உழைப்பிற்கான பலன் கிடைக்கும்... நல்லாட்சி தொடரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!