India
சிவப்பு விளக்கு எரிந்தால் வண்டியை ஆப் செய்யவும்... வாகன ஓட்டிகளுக்கு டெல்லி அரசு புதிய உத்தரவு!
இந்தியாவில் ஆண்டுதோறும் காற்று மாசு அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாகத் தலைநகர் டெல்லியில் காற்று மாசு மிக அதிகமாகக் காணப்படுகிறது. மேலும் இந்தியாவில் மக்கள் சுவாசிக்கும் காற்றிலேயே அதிகபடியான மாசு கலந்துவிட்டதாக ஆய்வு ஒன்றும் எச்சரிக்கை செய்துள்ளது.
இதையடுத்து காற்று மாசுவை குறைக்க மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும் போது, வண்டிகளை அணைத்து வைக்க வேண்டும் என வாகன போட்டிகளுக்கு டெல்லி அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்," வாரத்தில் ஒரு நாளாவது கார், இருசக்கர வாகனம் போன்றவற்றைப் பயன்படுத்தாமல் மெட்ரோ ரயில், பேருந்து போன்ற பொது போக்குவரத்தைப் பயன்படுத்த மக்கள் உறுதியேற்க வேண்டும்.
மேலும் சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும் போது, வாகனங்களின் இயக்கத்தை நிறுத்தி வைக்கும் திட்டம் வரும் 18ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. பொதுமக்கள் இதைக் கடைப்பிடிக்க முன்வர வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
டிட்வா புயல் : சென்னை கட்டுபாட்டு மையம், புரசைவாக்கத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு!
-
IT ஊழியர்கள் பணிச்சுமை குறித்த கேள்வி.. ஆய்வுகள் இல்லை என்று சொல்லும் ஒன்றிய அமைச்சர் - சு.வெ. விமர்சனம்!
-
டிட்வா புயல்: “அடிப்படை வசதிகளையும் தேவைப்படும் காலம் வரை நமது அரசு வழங்கும்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
Re-entry கொடுத்த ஆதிரை: BB வீட்டிற்குள் யார் best ஆண்களா? பெண்களா? போட்டி போட்டு விளையாடும் housemates!
-
திருக்கார்த்திகை தீபத்திருவிழா : பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!