India
சிவப்பு விளக்கு எரிந்தால் வண்டியை ஆப் செய்யவும்... வாகன ஓட்டிகளுக்கு டெல்லி அரசு புதிய உத்தரவு!
இந்தியாவில் ஆண்டுதோறும் காற்று மாசு அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாகத் தலைநகர் டெல்லியில் காற்று மாசு மிக அதிகமாகக் காணப்படுகிறது. மேலும் இந்தியாவில் மக்கள் சுவாசிக்கும் காற்றிலேயே அதிகபடியான மாசு கலந்துவிட்டதாக ஆய்வு ஒன்றும் எச்சரிக்கை செய்துள்ளது.
இதையடுத்து காற்று மாசுவை குறைக்க மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும் போது, வண்டிகளை அணைத்து வைக்க வேண்டும் என வாகன போட்டிகளுக்கு டெல்லி அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்," வாரத்தில் ஒரு நாளாவது கார், இருசக்கர வாகனம் போன்றவற்றைப் பயன்படுத்தாமல் மெட்ரோ ரயில், பேருந்து போன்ற பொது போக்குவரத்தைப் பயன்படுத்த மக்கள் உறுதியேற்க வேண்டும்.
மேலும் சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும் போது, வாகனங்களின் இயக்கத்தை நிறுத்தி வைக்கும் திட்டம் வரும் 18ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. பொதுமக்கள் இதைக் கடைப்பிடிக்க முன்வர வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
இன்றுடன் ஓராண்டாக நீடிக்கும் மணிப்பூர் வன்முறை : வேடிக்கை பார்க்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
வயநாடு தொடர்ந்து மற்றொரு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி : எந்த தொகுதி? என்ன காரணம்?
-
மணிப்பூர் வன்முறை - கைகட்டி வேடிக்கை பார்த்த ஒன்றிய பா.ஜ.க. அரசும் குற்றவாளி அல்லவா? : முரசொலி!
-
3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை : முன்ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் ரேவண்ணா - கர்நாடக அரசியலில் அதிர்ச்சி !
-
மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார் - மோடி கொல்கத்தா நேரத்தில் செல்லும் வெளிவந்த அதிர்ச்சி !