India
கல்லூரி வளாகத்திலேயே மாணவியை பேப்பர் கட்டரால் குத்திக் கொன்ற சக மாணவன்... கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!
கேரள மாநிலம் கோட்டயம் பாலா பகுதியில் உள்ள செயின்ட் தாமஸ் கல்லூரியில் மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் பாலா பகுதியில் உள்ள செயின்ட் தாமஸ் கல்லூரியில் தலையோலப்பரம்பு என்ற பகுதியை சேர்ந்த 22 வயதான நித்தினா மோல் என்ற மாணவி மூன்றாமாண்டு சமையல்கலை படித்து வந்துள்ளார்.
அதே கல்லூரியில் கூத்தாட்டுக்குளத்தைச் சேர்ந்த அபிஷேக் பைஜு (21) என்ற மாணவரும் படித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை கல்லூரி வளாகத்தில் மாணவி நிதினாவை பேப்பரை வெட்டப் பயன்படுத்தும் கட்டரை வைத்து அபிஷேக் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில் அந்த மாணவி ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இதனைக் கண்டு சக மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர் போலிஸார் அந்த மாணவனை பிடித்து விசாரணை நடத்தியதில் காதல் விவகாரம் தொடர்பாக மாணவியை கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து அந்த மாணவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் கல்லூரி மாணவியை சக மாணவன் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“நானே ஜெயித்ததுபோல இருக்கு”: SBI வங்கி தேர்வில் வெற்றி பெற்ற கமலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
இவ்வளவு கொடூரமான ஒரு மனிதனுக்கு எப்படி ஜாமீன் கிடைக்கும்? : சுப்ரியா சுலே MP கேள்வி!
-
“எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகள்..”: கிறிஸ்தவர்களை தாக்கும் இந்துத்வ கும்பல் - முதலமைச்சர் கண்டனம்!
-
கிறிஸ்தவர்களைக் குறிவைத்து தாக்கும் இந்துத்துவ கும்பல் : அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்!
-
கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை: 2 மாவட்டங்களில் முதல்வர் கள ஆய்வு.. திறந்து வைக்கப்படும் திட்டங்கள்? விவரம்