India
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: டெல்லி ஐகோர்ட்டில் நடந்தது என்ன?
டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த டிங்குராம் என்ற ஆயுதப்படையைச் சேர்ந்த போலிஸ்காரர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, திடீரென அவர் வைத்தியருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்து நீதிமன்ற வளாகத்திலிருந்து வழக்கறிஞர்கள் மற்றும் சக போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.
பிறகு போலிஸார் அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து போலிஸார் விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் டிங்குராம் விடுப்பில் சென்று இன்று தான் பணிக்குத் திருப்பியுள்ள நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இவரின் தற்கொலைக்கு குடும்ப பிரச்சனையா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்பது குறித்து போலிஸார் விசாரித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி ரோகிணி நீதிமன்றத்தில் பிரபல ரவுடி சுட்டுக்கொல்லப்பட்டார். டெல்லி நீதிமன்றங்களில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Also Read
-
பேட்மிண்டன் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் 2025 : தங்கப்பதக்கம் வென்ற தீக்ஷாவுக்கு துணை முதல்வர் பாராட்டு!
-
ஒடிசா தேர்தல் முதல் ராமேஸ்வரம் கஃபே வரை.. “தமிழன் என்றால் அவ்வளவு கேவலமா?” -பட்டியலிட்டு RS பாரதி ஆவேசம்!
-
காலநிலை நடவடிக்கை கண்காணிப்பு & மாவட்ட கார்பன் நீக்கத் திட்டங்கள்... தமிழ்நாடு முன்னிலை!
-
“இவையெல்லாம் பீகார் மக்கள் தமிழ்நாட்டுக்கு அளித்த நற்சான்றிதழ்கள்” -பட்டியலிட்டு தயாநிதி மாறன் MP பதிலடி!
-
முதலமைச்சரிடம் உறுதியளித்த ஃபோர்டு நிறுவனம் - ரூ.3250 கோடி முதலீட்டில் புதிய ஒப்பந்தம் கையெழுத்து !