India
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: டெல்லி ஐகோர்ட்டில் நடந்தது என்ன?
டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த டிங்குராம் என்ற ஆயுதப்படையைச் சேர்ந்த போலிஸ்காரர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, திடீரென அவர் வைத்தியருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்து நீதிமன்ற வளாகத்திலிருந்து வழக்கறிஞர்கள் மற்றும் சக போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.
பிறகு போலிஸார் அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து போலிஸார் விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் டிங்குராம் விடுப்பில் சென்று இன்று தான் பணிக்குத் திருப்பியுள்ள நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இவரின் தற்கொலைக்கு குடும்ப பிரச்சனையா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்பது குறித்து போலிஸார் விசாரித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி ரோகிணி நீதிமன்றத்தில் பிரபல ரவுடி சுட்டுக்கொல்லப்பட்டார். டெல்லி நீதிமன்றங்களில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Also Read
-
“தமிழ்நாடா, உத்தரபிரதேசமா? 15 நாள்.. 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள்” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி!
-
”தவெக ஆட்சியில் குற்றவாளிகளின் கூடாரமாக தமிழ்நாடு.. வாய் திறப்பாரா முதல்வர் விஜய்?” : முரசொலி விமர்சனம்!
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!