India
“மனைவி குளிக்கவில்லை என விவாகரத்து கோரிய கணவர்” : உத்தரப் பிரதேசத்தில் நடந்த வினோத வழக்கு - பின்னணி என்ன?
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தின் சண்டூஸ் பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு ஒரு வயதில் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் தனது மனைவி தினமும் குளிப்பதில்லை என அவரது கணவர் விவாகரத்து கோரியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மகளிர் பாதுகாப்பு பிரிவுக்கு எழுத்துப்பூர்வ புகார் ஒன்றை அந்த பெண் அளித்துள்ளார். அந்த புகாரில், தனது கணவர் நான் தினமும் குளிக்கவில்லை என விவாகரத்து கேட்கிறார். ஆனால், எனக்கு இந்த திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்ள விரும்பம் இல்லை; அவருடன் சேர்ந்து வாழ விரும்பிகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அந்த பெண்ணின் கணவரிடம் கேட்டபோது, என் மனைவியை தினம்தோறும் குளிக்கச் சொன்னால் சண்டை போடுகிறார். எனவே அவருடன் வாழவிருப்பம் இல்லை என்று கூறியுள்ளார்.
இதனால் இரண்டு பேரையு அழைத்த குடும்ப நலத் துறையினர் அவர்களுக்கு அறிவுரைகள் கூறி, குளிக்கவில்லை என்பதெல்லாம் விவாகரத்து பெற தகுந்த காரணம் இல்லை எனக் கூறி, அவர்கள் இருவருக்கும் கால அவகாசம் அளித்துள்ளனர். மனைவி குளிக்கவில்லை என கணவர் விவாகரத்து கோரியுள்ள விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Also Read
-
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் முதல் திருநங்கைகளுக்கான ரேஷன் அட்டை வரை.. DMK MP-க்கள் அடுக்கடுக்கான கேள்வி
-
தொழில் முனைவுதிட்டம் முதல் மானியத்துடன் கூடிய கடன் வரை.. SC/ST முன்னேற்றத்தின் பட்டியல்.. அரசு பாராட்டு!
-
“கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பெரம்பூரில் ரூ.39 கோடியில் 310 திறந்தவெளி மின்மாற்றிகள் அமைக்கும் பணிகள் தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
கொளத்தூர் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்! - 6 நியாய விலைக்கடைகள், மறுவாழ்வு மையம் தொடக்கம்!