India
எறும்புக்காக விமானத்தையே மாற்றிய ஏர் இந்தியா... உண்மையான காரணம் என்ன தெரியுமா?
டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று லண்டன் செல்லவிருந்தது ஏ1-111 விமானம். இந்த விமானம் புறப்படுவதற்கு முன்னர் பிசினஸ் கிளாஸ் இருக்கைகள் இருந்த பகுதியில் எறும்புகள் ஊர்வது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, பயணிகள் அனைவரும் தங்கள் லக்கேஜை எடுத்துக்கொண்டு விமானத்திலிருந்து வெளியேறும்படியும், லண்டன் செல்ல வேறு விமானம் வரும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் காரணம் என்னவென்று கேட்டனர். அந்த விமானத்தில் பூட்டான் இளவரசர் ஜிக்மே நாம்கியெல் வாங்சுக் பயணிப்பதாகவும், அவர் பயணிக்கும் பிஸினஸ் கிளாஸில் எறும்புகள் வந்துவிட்டதாகவும் அதனால் விமானத்தை மாற்றுவதாகவும் கூறியுள்ளனர்.
பூடான் மன்னரின் மகனுக்காக ஏர் இந்தியா நிறுவனம் விமானத்தையே மாற்றுவதைக் கேட்ட பயணிகள் ஆச்சரியமடைந்தனர்.
கடந்த மே மாதம் அமெரிக்காவுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட அரை மணி நேரத்திற்குப் பின்னர் மீண்டும் டெல்லிக்கே திரும்பியது. விமானத்தில் வவ்வால் ஒன்று இருந்ததால் விமானம் திரும்பியதோடு வேறு விமானத்தில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடவேண்டும்! கொஞ்சம் அசந்தாலும்...” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ்-க்கு என்ன ஆனது? : ICU-ல் சிகிச்சை!
-
சென்னையில் 4.09 லட்சம் பேருக்கு உணவு! : தமிழ்நாடு அரசின் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
-
பருவ மழையை எதிர்கொள்ள அரசு தயார் : களத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தி.மு.க - காங்கிரஸ் உறவு நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்றும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!