India
“கொரானா மூன்றாம் அலை குழந்தைகளை கடுமையாக பாதிக்குமா?” : டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் விளக்கம்!
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், மூன்றாம் அலை வரும் என மருத்துவர்களும், உலக சுகாதார அமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக மூன்றாம் அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என பரவலாகச் சொல்லப்பட்டு வருகிறது. இதனால் பெற்றோர்கள் பீதியடைந்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் மூன்றாவது அலை குழந்தைகளைத் தாக்குவதற்கான எந்தவிதமான அடிப்படை ஆதாரமும் இல்லை என எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ரந்தீப் குலேரியா," இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 60 முதல் 70 சதவீதம் குழந்தைகளுக்கு ஏற்கனவே இணை நோய்கள் இருந்துள்ளன. மேலும் வீடுகளிலேயே கொரோனா சிகிச்சை பெற்ற குழந்தைகளுக்குக் குறைந்த அளவிலான பாதிப்புகளே ஏற்பட்டுள்ளன. இவர்கள் யாரும் மருத்துவமனைக்கு வராமலேயே குணமடைந்துள்ளனர்.
எனவே, கொரோனா மூன்றாவது அலையில் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. முதல் இரண்டு அலைகளின் போதும் கிடைத்த தரவுகள் ஆய்வு செய்ததில் பெரிய அளவில் குழந்தைகளுக்குப் பாதிப்பு ஏற்படவில்லை.
இந்தியாவில் கிடைத்த தகவல்கள் மட்டுமல்ல, உலகின் பல இடங்களில் கிடைத்த தரவுகளை நாங்கள் ஆராய்ந்துவிட்டோம். இதில் குழந்தைகளை மூன்றாம் அலை அதிகம் தாக்குவதற்கான எந்த தரவுகளும் இல்லை" என்றார்.
Also Read
-
பேரவை நேரலை இருட்டடிப்பு: “இதுவும் பாசிச நடவடிக்கையே” - சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கடிதம்!
-
வெள்ளை அறிக்கை : “‘Sorry Bro’ என்று சொல்வதற்கு 210 பக்கமா?” - முரசொலி கடும் தாக்கு!
-
“ஒரு மாவட்டத்தில் மட்டும்.. 18 நாட்களில்.. 17 போக்சோ வழக்குகள்” - அதிரவைக்கும் தகவல்களின் முழு விவரம்!
-
“FIFA WorldCup.. ‘கால்பந்து குழந்தை இயேசு’ ரசிகர்களின் அளவிலா அன்பு” - சுவாரசிய சம்பவத்தின் பிண்ணனி!”
-
“கம்பீர் தேவையில்லை.. இந்திய அணிக்கு தோனியை கொண்டு வாருங்கள்… முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து!”