India
“ஆக்சிஜன் உபகரணங்களின் வரி குறைய வாய்ப்பு” - ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பரிந்துரை!
மருத்துவ ஆக்சிஜன், ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் அளவீட்டு கருவிகள், கொரோனோ சோதனை கருவிகள் ஆகியவற்றின் ஜி.எஸ்.டி வரியை 12% லிருந்து 5% மாக குறைக்க ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.
ஏழு மாதங்களுக்குப் பிறகு வரும் மே 28 ஆம் தேதி ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் கூடுகிறது. இதில் பல உயிர்காக்கும் மருந்துகளின் வரி, கொரோனா பயன்பாட்டுக்கான பொருள்கள் ஆகியவற்றின் வரியைக் குறைக்க வேண்டும் என்று பல்வேறு மாநிலங்கள் கோரிக்கை வைத்துள்ளன.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்து பரிந்துரைக்குழு இன்றுகூடி ஆலோசனை நடத்தி சில பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
அதில் மத்திய, மாநில அரசுகளுக்கு நன்கொடையாக வரும் ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கு ஐ.ஜி.எஸ்.டி வரியிலிருந்து விலக்கு அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மருத்துவ ஆக்சிஜன், ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் அளவீட்டு கருவிகள், கொரோனோ சோதனை கருவிகள் ஆகியவற்றின் ஜி.எஸ்.டி வரியை 12% லிருந்து 5% மாக குறைக்க ஜி.எஸ்.டி வரிப் பரிந்துரைக் குழுவான பிட்மெண்ட் கமிட்டி ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு பரிந்துரை வழங்கியுள்ளது.
அதே நேரத்தில் 18% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ள சானிடைசர், 12% உள்ள வெண்ட்டிலேட்டர், பி.பி.இ கிட், 5% உள்ள தடுப்பூசி, மாஸ்க் ஆகியவற்றின் வரிகளைக் குறைக்கக்கூடாது என்று ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு பரிந்துரை வழங்கியுள்ளது.
பெட்ரோலியப் பொருள்களை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவருவது குறித்து வரும் கூட்டத்தில் விவாதிக்க தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.
Also Read
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!
-
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!