India
“ஆக்சிஜன் உபகரணங்களின் வரி குறைய வாய்ப்பு” - ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பரிந்துரை!
மருத்துவ ஆக்சிஜன், ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் அளவீட்டு கருவிகள், கொரோனோ சோதனை கருவிகள் ஆகியவற்றின் ஜி.எஸ்.டி வரியை 12% லிருந்து 5% மாக குறைக்க ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.
ஏழு மாதங்களுக்குப் பிறகு வரும் மே 28 ஆம் தேதி ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் கூடுகிறது. இதில் பல உயிர்காக்கும் மருந்துகளின் வரி, கொரோனா பயன்பாட்டுக்கான பொருள்கள் ஆகியவற்றின் வரியைக் குறைக்க வேண்டும் என்று பல்வேறு மாநிலங்கள் கோரிக்கை வைத்துள்ளன.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்து பரிந்துரைக்குழு இன்றுகூடி ஆலோசனை நடத்தி சில பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
அதில் மத்திய, மாநில அரசுகளுக்கு நன்கொடையாக வரும் ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கு ஐ.ஜி.எஸ்.டி வரியிலிருந்து விலக்கு அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மருத்துவ ஆக்சிஜன், ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் அளவீட்டு கருவிகள், கொரோனோ சோதனை கருவிகள் ஆகியவற்றின் ஜி.எஸ்.டி வரியை 12% லிருந்து 5% மாக குறைக்க ஜி.எஸ்.டி வரிப் பரிந்துரைக் குழுவான பிட்மெண்ட் கமிட்டி ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு பரிந்துரை வழங்கியுள்ளது.
அதே நேரத்தில் 18% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ள சானிடைசர், 12% உள்ள வெண்ட்டிலேட்டர், பி.பி.இ கிட், 5% உள்ள தடுப்பூசி, மாஸ்க் ஆகியவற்றின் வரிகளைக் குறைக்கக்கூடாது என்று ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு பரிந்துரை வழங்கியுள்ளது.
பெட்ரோலியப் பொருள்களை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவருவது குறித்து வரும் கூட்டத்தில் விவாதிக்க தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.
Also Read
-
இளம்பெண்களின் கவனத்திற்கு... விலையில்லா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி.. எப்போது செலுத்தப்படும்?
-
“அங்கன்வாடிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்...” - திமுக எம்.பி. கிரிராஜன் வலியுறுத்தல்!
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!