India
ம.பியில் ஆக்சிஜன் லாரியை மறித்து பூஜை - பாஜகவினரின் விளம்பர வெறியால் உயிருக்கு போராடும் கோவிட் நோயாளிகள்!
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதில் தட்டுப்பாடு நிலவி வரும் வேளையில் மத்திய பிரதேசத்துக்கான ஆக்சிஜன் சிலிண்டர்களை கொண்டுச் சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்தி பாஜகவினர் பூஜை செய்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்ட நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தின் ஜாம் நகரில் இருந்து மத்திய பிரதேசத்தில் இந்தூருக்கு சுமார் 30 டன் ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் சென்றிருக்கிறது டேங்கர் லாரி. நோயாளிகளின் அவசரம் புரிந்து உரிய நேரத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற உணர்வில் லாரி ஓட்டுநரோ சைலேந்திர குஷ்வாவோ 700 கிலோ மீட்டர் தொலைவிலான பயணத்தில் வெறும் 3 மணி நேரம் மட்டும் தூங்கியிருக்கிறார்.
இப்படி இருக்கையில் இந்தூர் நகருக்குள் நுழைவதற்கு முன்பே இரண்டு மணி நேரமாக ஆங்காங்கே லாரியை நிறுத்திய பாஜகவினர் பூஜை செய்து, புகைப்படங்களை எடுத்து நோயாளிகளின் உயிரோடு விளையாடியிருக்கிறார்கள். குஜராத்தில் இருந்து பிரதமர் மோடி ஆக்சிஜன் சிலிண்டர்களை அனுப்பியுள்ளதை விளம்பரப்படுத்தும் நோக்கில் இவ்வாறான கேவலமான செயலில் மத்திய பிரதேச பாஜக எம்பி சங்கர் லால்வானி, எம்.எல்.ஏக்கள் ரமேஷ் மெண்டேலா, ஆகாஷ் விஜயவர்ஜியா ஈடுபட்டிருக்கிறார்கள்.
ஆக்சிஜன் பற்றாக்குறையால் நாட்டில் மக்கள் உயிரிழந்து வரும் வேளையில் மத்திய பிரதேசத்திலேயே 6 பேர் பலியாகியிருப்பது விளம்பற வெறி பிடித்த பாஜகவினரின் அறிவுக்கு ஏன் எட்டுவதில்லை என்று சமூக ஆர்வலர்கள், அரசியல் நோக்கர்கள் கண்டனக் குரல்களை எழுப்பியுள்ளனர்.
Also Read
-
தவெக ஆட்சியில் ‘அரசு வழக்கறிஞர்’ பதவிக்கு ரூ.30 லட்சம் வரை லஞ்சம்! : திமுக தகவல் தொழில்நுட்ப அணி கண்டனம்!
-
“த.வெ.க வாஷிங் மெஷினில் புனிதர்களாகும் ஊழல் வாதிகள்” : முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!
-
லஞ்சம் பெற்று அரசு வழக்கறிஞர் நியமனம்... தவெக அரசுக்கு எதிராக வழக்கு போட்ட தவெக வழக்கறிஞர் - விவரம்!
-
அண்ணா திராவிட கழகமாக மாறும் தமிழக வெற்றிக் கழகம்.. குதிரை பேரம் மூலம் கட்சிக்கு ஆள் சேர்க்கும் விஜய்?
-
விஜய்க்கு ஊழலைப் பற்றி பேசுவதற்கு யோக்கியதை இருக்கிறது? - பட்டியலிட்டு பதிலடி கொடுத்த முரசொலி!