India
ஜனநாயகத்தை மோடியும் கடைபிடிப்பதில்லை கிரண்பேடியும் கடைபிடிப்பது இல்லை - புதுவை முதல்வர் குற்றச்சாட்டு!
2021ஆம் ஆண்டு ஒரு அமைதியான ஆண்டாகவும் வளத்தை கொடுக்கும் ஆண்டாகவும் அமைய வேண்டும் என புதுச்சேரி மக்களுக்கு வாழ்த்துக்கூறியுள்ளார் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி.
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, அப்போது புதுச்சேரி மக்களுக்கு 2021ம் ஆண்டு மகிழ்ச்சியாக தொடங்கியுள்ளது என்றும் புத்தாண்டு கொண்டாடுவதற்கு காவல்துறையும் வருவாய்த் துறையும் சிறப்பான ஏற்பாடுகளை செய்தது.
இதனால் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் புதுச்சேரியில் கோலாகலமாக புத்தாண்டை கொண்டாடினர் என்று கூறிய அவர் மாநில அரசின் உறுதியான முடிவால் புதுச்சேரியில் புத்தாண்டு விமரிசையாக கொண்டாடப்பட்டது என்றார்.
மேலும் கொரோனா நோய்த் தொற்றுக்கு இடையில் எந்தவித கொண்டாட்டமும் இல்லாமல் இருந்த மக்கள் உற்சாகமாக இந்த புத்தாண்டை கொண்டாடியது என்னால் பார்க்க முடிந்தது என்று கூறிய அவர் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி மாநிலத்தின் பொருளாதாரம் வளர வேண்டும் என்பதற்காகவும் புத்தாண்டை கொண்டாட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாடப்பட்டது என்று கூறிய அவர் 2021ஆம் ஆண்டு புதுச்சேரி மக்களுக்கு ஒரு அமைதி ஆண்டாகவும் வளத்தை கொடுக்கும் ஆண்டாகவும் அமைய வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரி மாநிலம் தொல்லைகள் இல்லாத மாநிலமாக அமைய வேண்டும் என்று கூறியதோடு, ஜனநாயகத்தை மோடியும் கடைபிடிப்பதில்லை கிரண்பேடியும் கடைபிடிப்பது இல்லை என குற்றம் சாட்டினார்.
Also Read
-
அமைச்சர் சரத்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் : தி.மு.க. மாணவரணி திட்டவட்டம்!
-
மீண்டும் மதமாற்ற தடைசட்டமா?; பா.ஜ.க அஜெண்டாவுக்கு வேலை பார்க்கும் த.வெ.க : தி.மு.க கண்டனம்!
-
‘பொறுப்பேற்று’ செயல்பட த.வெ.க அரசு மறுப்பதே, பிரச்சனைகள் அதிகரிக்கக் காரணம்! : கனிமொழி கண்டனம்!
-
“SofaModel அரசால் திணிக்கப்படும் இடைத்தேர்தல்.. மக்கள் பாடம் புகட்டுவார்கள்” - உதயநிதி ஸ்டாலின்!
-
டேக் டைவர்ஷன் என ஓடும் ரீல்ஸ் ஆட்சிக்கு.. மக்களே முற்றுப்புள்ளி வைப்பார்கள் - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!