India
ஜனநாயகத்தை மோடியும் கடைபிடிப்பதில்லை கிரண்பேடியும் கடைபிடிப்பது இல்லை - புதுவை முதல்வர் குற்றச்சாட்டு!
2021ஆம் ஆண்டு ஒரு அமைதியான ஆண்டாகவும் வளத்தை கொடுக்கும் ஆண்டாகவும் அமைய வேண்டும் என புதுச்சேரி மக்களுக்கு வாழ்த்துக்கூறியுள்ளார் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி.
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, அப்போது புதுச்சேரி மக்களுக்கு 2021ம் ஆண்டு மகிழ்ச்சியாக தொடங்கியுள்ளது என்றும் புத்தாண்டு கொண்டாடுவதற்கு காவல்துறையும் வருவாய்த் துறையும் சிறப்பான ஏற்பாடுகளை செய்தது.
இதனால் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் புதுச்சேரியில் கோலாகலமாக புத்தாண்டை கொண்டாடினர் என்று கூறிய அவர் மாநில அரசின் உறுதியான முடிவால் புதுச்சேரியில் புத்தாண்டு விமரிசையாக கொண்டாடப்பட்டது என்றார்.
மேலும் கொரோனா நோய்த் தொற்றுக்கு இடையில் எந்தவித கொண்டாட்டமும் இல்லாமல் இருந்த மக்கள் உற்சாகமாக இந்த புத்தாண்டை கொண்டாடியது என்னால் பார்க்க முடிந்தது என்று கூறிய அவர் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி மாநிலத்தின் பொருளாதாரம் வளர வேண்டும் என்பதற்காகவும் புத்தாண்டை கொண்டாட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாடப்பட்டது என்று கூறிய அவர் 2021ஆம் ஆண்டு புதுச்சேரி மக்களுக்கு ஒரு அமைதி ஆண்டாகவும் வளத்தை கொடுக்கும் ஆண்டாகவும் அமைய வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரி மாநிலம் தொல்லைகள் இல்லாத மாநிலமாக அமைய வேண்டும் என்று கூறியதோடு, ஜனநாயகத்தை மோடியும் கடைபிடிப்பதில்லை கிரண்பேடியும் கடைபிடிப்பது இல்லை என குற்றம் சாட்டினார்.
Also Read
-
“திருக்குறளை தேசிய நூலாக ஆக்க வேண்டும்!” : உலகப் பொதுமறையை பறைசாற்றிய முரசொலி தலையங்கம்!
-
மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?
-
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்.. சென்னையில் முகாம்கள் நடைபெறும் நாள், இடங்கள் என்ன?- முழு விவரம் உள்ளே!
-
கடலூர், சிதம்பரம் மக்கள் கவனத்துக்கு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் என்ன ?
-
துணை வேந்தர் விவகாரம்... ஆளுநரின் நியமனம் செல்லாது : மீண்டும் மீண்டும் கொட்டுவைத்த உயர்நீதிமன்றம் !