India
இந்தியாவில் ஊடுருவிய “உருமாறிய கொரோனா” : 25ஆக உயர்ந்தது புதிய ரக தொற்று பாதிப்பு!
தற்போது உலகத்தையே அச்சுறுத்தும் உருமாறிய கொரோனா வைரஸ் முதன்முதலில் பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த உருமாறிய வைரஸ், பழைய கொரோனா வைரஸைவிட மிகவும் வேகமாகப் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டதால், பிரிட்டனுடனான விமானப் போக்குவரத்தை இந்தியா உட்பட பல நாடுகள் தடை செய்தன.
சமீபமாக பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பியவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு சோதனைகள் நடத்தப்பட்டன. வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டவர்கள் தனி அறையில் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், உருமாறிய கொரோனா இந்தியாவில் மேலும் 5 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மொத்தம் 25-ஆக உயர்ந்திருக்கிறது. தமிழகத்தில் தற்போது வரை ஒருவருக்கு மட்டும் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
Also Read
-
பெண்கள் பாதுகாப்பு குறித்த எடப்பாடியின் அற்பத்தனம் அம்பலமானது : ஆர்.எஸ்.பாரதி பதிலடி!
-
ஒரு குடும்பச் சண்டைக்கு அறிக்கை விட்ட பழனிசாமி : கோவை விவகாரத்தில் திமுக IT WING பதிலடி!
-
‘அறிவுத் திருவிழா’ - இளைஞர்களுக்கு திராவிட கொள்கை உரம் ஊட்டும் உதயநிதி : முரசொலி புகழாரம்!
-
சாலை விபத்தில் உயிரிழந்த தூய்மை பணியாளர் : இரங்கல் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி!
-
”இந்திய விளையாட்டின் தலைநகரம் தமிழ்நாடு” : டெல்லியில் பெருமையுடன் சொன்ன துணை முதலமைச்சர் உதயநிதி!