India
“கோவாக்சின் தடுப்பூசியால் பக்க விளைவுகள் எதுவும் இல்லை” : முதல்கட்ட சோதனை முடிவு குறித்து ICMR தகவல்!
இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு மருந்துகள் தயாரிக்கும் பணியில் உலக நாடுகள் மும்பரமாக ஈடுபட்டு வரும் வேலையில், 2022ம் ஆண்டுதான் கொரோனா தடுப்பூசி இயல்பாக கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டுகிறது.
இந்நிலையில் இந்தியாவில் பாரத் பயோடெக் மற்றும் ஐ.சி.எம்.ஆர் தயாரிக்கப்படும் கோவாக்சின் தடுப்பூசியின் முதல் கட்ட சோதனை நிறைவு பெற்று முடிவுகள் வெளியாகிவுள்ளது. இதுதொடர்பாக பாரத் பயோடெக் மற்றும் ஐ.சி.எம்.ஆர் சார்பில் வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கண்டறியப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியின் முதல்கட்ட சோதனை முடிவில், தடுப்பு மருந்து பாதுகாப்பாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாது, பக்கவிளைவுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் இந்த தடுப்பூசி 2 மற்றும் 8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் வைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசியின் 3ம் கட்ட மனித உடலில் செலுத்தும் மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் இதில் சுமார் 26,000 பங்கேற்றிருப்பதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.
Also Read
-
“இன்று வெளியானது வெள்ளை அறிக்கை அல்ல, வெற்று அறிக்கை.. விரைவில் பதில் கூறுகிறேன்” : தங்கம் தென்னரசு!
-
குளத்தில் வாத்து பிடிக்கச் சென்ற அண்ணன், தம்பி : திடீரென நடந்த சோகம்!
-
“விவசாயத்தை அழிக்கும்.. ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது” : CPI(M) வலியுறுத்தல்!
-
“தமிழ்நாட்டை பீகார், உத்தரப்பிரதேசமாக மாற்றிய த.வெ.க அரசு” : தி.மு.க அயலக அணி விமர்சனம்!
-
“ஈவு இரக்கமற்ற காட்டாட்சி...!" - த.வெ.க அரசை கடுமையாகச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!