India
டிக் டாக், லுடோ, பப்ஜியை தொடர்ந்து மேலும் 43 சீன செயலிகளுக்கு தடை விதிப்பு - அரசாணை வெளியீடு!
நாட்டின் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் தீங்கு விளைவிப்பதாக உள்ள 43 செல்ஃபோன் செயலிகளுக்கு தடை விதித்துள்ளது மத்திய அரசு.
பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் இந்த செயலிகள் செயல்பட்டதால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லடாக் எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுறுவலை அடுத்து இந்தியாவில் பிரபலமாக இயக்கப்பட்டு வந்த டிக்டாக், பப்ஜி, லூடோ போன்ற 118 மற்றும் 59 என சீன செயலிகளுக்கு மத்திய மோடி அரசு தடை விதித்திருந்தது.
அந்த வகையில் தற்போது அலிபாபா, அலி சப்ளையர்ஸ், அலி பே, ஸ்னாக் வீடியோ, கேம்கார்டு மற்று டேட்டிங் செயலிகள் என 43 செயலிகளை இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டம் 69ஏ பிரிவின் கீழ் இந்திய பயனர்கள் பயன்படுத்தாத வகையில் தடை செய்யப்பட்டுள்ளது.
Also Read
-
தொழில்துறை,கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது- இங்கிலாந்துக்கான இந்திய தூதர் பாராட்டு!
-
ஹிந்துஜா குழுமம் ரூ.5000 கோடி முதலீடு: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் 13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
பணியின்போது கிடைத்த தங்கச் சங்கிலி.. பத்திரமாக ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு துணை முதலமைச்சர் பாராட்டு!
-
“வரி சீர்திருத்தத்தை விட முக்கியமாக நிதி சீர்திருத்தமே தேவை” - ஒன்றிய அரசுக்கு முரசொலி அறிவுறுத்தல்!
-
“தந்தை பெரியார் விதைத்தது நாத்திகம் இல்லை; பகுத்தறிவு!” - Oxford பல்கலை.யில் முதலமைச்சர் பேச்சு!