India
“அம்பானிக்கும் அதானிக்கும் மட்டுமே விசுவாசம் காட்டுகிறார் பிரதமர் மோடி” - பீகாரில் ராகுல் காந்தி விளாசல்!
பீகார் மாநிலத்தில் வரும் அக்டோபர் 28ம் தேதி முதல் மூன்று கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் நவாடா மாவட்டம் ஹிசுவாவில் நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி-யுமான ராகுல் காந்தி பங்கேற்றுப் பேசினார்.
அப்போது பேசிய ராகுல் காந்தி, “பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பீகாருக்கு எதுவும் செய்யவில்லை. பீகார் மக்களிடையே பிரதமர் மோடி பொய்யான பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த தேர்தலின்போது 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனக்கூறினார் மோடி. ஆனால் வேலைவாய்ப்பு வழங்கினாரா?
நீங்கள் உங்கள் பணத்தை வங்கிகளில் வைக்கவில்லை; பணக்காரர்களின் பைகளில் வைத்துள்ளீர்கள். கறுப்புப் பணத்திற்கு எதிராகப் போராடச் சொன்னார்கள். ஆனால் அதானி போன்றோர்கள் வங்கி வரிசையில் நிற்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?
இராணுவ வீரர்கள், விவசாயிகள், தொழிலாளர்களுக்காக நான் தலை வணங்குகிறேன் என பிரதமர் கூறுகிறார். ஆனால், அம்பானிக்கும் அதானிக்குமே அவர் விசுவாசமாகச் செயல்படுகிறார்.” என கடுமையாகச் சாடியுள்ளார்.
Also Read
-
“பெண்கள் உயர்ந்து நடைபோட உரிமைத் தொகையும் உயரும்; உரிமையும் உயரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம்
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!