India
விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை ரத்துசெய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் மனு!
விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்துசெய்யக் கோரி தி.மு.க சார்பில் திருச்சி சிவா எம்.பி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், பா.ஜ.க அரசால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்கள் அரசியல் சாசனத்துக்கு எதிரானது, சட்டவிரோதமானது என்பதால் அவற்றை ரத்துசெய்து உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
விவசாயம் மாநிலப் பட்டியலில் உள்ளது. பல்வேறு மாநிலங்களில் அமலில் உள்ள விவசாய சட்டங்களைச் செயல் இழக்கச் செய்யும் விதமாக இந்த சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கருத்தைக் கேட்காமல் நாடாளுமன்ற விதிமுறைகளை மீறி ஜனநாயக விரோதமாக இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அதற்கான விடியோ ஆதாரங்களை பின்னர் தாக்கல் செய்வதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதனை எல்லாம் குறிப்பிட்டு குடியரசுத் தலைவருக்கு 20 கட்சிகள் புகார் அளித்தன. அதனையும் மீறி சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. எனவே, விவசாயிகளின் நலனுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் மூன்று மசோதாக்காளையும் ரத்துசெய்து உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Also Read
-
“இன்னொரு நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதை அமெரிக்காவும் இஸ்ரேலும் எப்போது நிறுத்தும்?”: முரசொலி காட்டம்!
-
100 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள் இயக்கம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
-
உலக தரத்தில் ரூ.20 கோடியில் ஆர்.கே.நகர் விளையாட்டு வளாகம் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
பள்ளி கட்டடம் முதல் பேருந்து நிலையம் வரை : சென்னையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த துணை முதலமைச்சர்!
-
“இது எண்ணிக்கைக்கான கூட்டணி அல்ல! எண்ணத்தால் உருவாக்கப்பட்டுள்ள கூட்டணி!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!