India

“44 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி - கொரோனாவால் திணறும் இந்திய தொழிற்துறை” : மத்திய புள்ளியியல் துறை தகவல்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மேலும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் தொழில்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் என அனைத்தும் மூடப்பட்டதால் அரசுக்கு வருவாய் பெருமளவு குறைந்துவிட்டது. இந்த ஊரடங்கால் மக்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.

இந்தச் சூழலில் தளர்வுகள் அளித்தாலும் நிறுவனங்கள் முழுமையாகச் செயல்படமுடியாத சூழலே உள்ளது. தொடர்ந்து நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் பொருளாதார பாதிப்பு காரணமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 44 காலாண்டுகளில் இல்லாத சரிவை சந்தித்திருப்பதாக மத்திய புள்ளியல் துறை தெரிவித்துள்ளர்.

இந்நிலையில், 2020, ஜூன் மாதத்திற்கான தொழிற்துறை உற்பத்தி மதிப்பீட்டு (Estimates of Index of Industrial Production - IIP) விவரங்களை மத்திய புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடப்பு நிதியாண்டின் கடைசி காலாண்டில் நாட்டின் தயாரிப்புத் துறை பின்னடைவை சந்தித்துள்ளது.

மேலும், கடந்த ஜூன் மாதத்திற்கான இந்தியாவின் தொழில் துறை உற்பத்தி(IIP) 16.6 சதவிகிதம் வீழ்ச்சி காணலாம். சுரங்கத் தொழில், கடந்த 2019 ஜூன்மாதத்துடன் ஒப்பிடும்போது, 2020 ஜூனில் 19.8 சதவிகித வீழ்ச்சி காணலாம்.

இதேபோல் உற்பத்தித் துறை 17.1 சதவிகிதம், மின்சாரத் துறை 10 சதவிகிதம், முதன்மை பொருட்கள் துறையின் உற்பத்தி 14.6 சதவிகிதம், மூலதனபொருட்கள் உற்பத்தி 36.9 சதவிகிதம் என்ற அளவில் வீழ்ச்சி காணலாம்

அதுமட்டுமல்லாது, இடைநிலை பொருட்கள் துறை 25.1 சதவிகிதம், கட்டமைப்பு மற்றும் கட்டுமானத்துறை 21.3 சதவிகிதம், நுகர்வோர் சாதனங்கள் துறை 35.5 சதவிகிதம் வீழ்ச்சி காணலாம்” என மதிப்பிட்டுள்ளது. இது ஒருவிரைவு மதிப்பீடு (Quick Estimate) தான்எனவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு ஓடிவிடத் தயாராக இருக்கும் அ.தி.மு.க அமைச்சர்கள்” - மு.க.ஸ்டாலின் பேச்சு!