India
20 ஆண்டுகளில் இல்லாத வாராக்கடன்: கார்ப்பரேட் முதலாளிகளுக்காக சிறு, குறு தொழில்கள் மீது பழிபோடும் ஆர்பிஐ!
அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், கோடிக் கணக்கில் வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு வேண்டுமென்றே திருப்பி செலுத்தாத நிறுவனங்களின் பட்டியலை அண்மையில் வெளியிட்டிருந்தது.
அதில், நீரவ் மோடி, லலித் மோடி, விஜய் மல்லையா போன்ற தொழிலதிபர்களின் மோசடியால் வங்கிகளின் நிதிநிலை மிகவும் மோசமடைந்திருப்பது குறித்து சுட்டிக்காட்டப்பட்டது.
இந்நிலையில் நிதிநிலை தன்மை குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா காரணமாக கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாராக்கடன் அதிகரிக்கும் என எச்சரித்துள்ளது.
ஊரடங்கால் ஏராளமான தொழில்துறைகள் முடங்கி வேலை வாய்ப்பை இழந்ததால் வருவாய் குறைந்துவிட்டது. கடந்த ஏப்ரல் 30ம் தேதியின் படி 48.6 சதவிகித வாடிக்கையாளர்கள் கடன் தவணை சலுகை திட்டத்தை பயன்படுத்தியுள்ளனர். 2021 மார்ச் இறுதியில் தவணை சலுகையை பயன்படுத்திய கடன்கள் 25-30 சதவிகிதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் வங்கிகளின் நிதிநிலை மேலும் மோசமாக வாய்ப்புள்ளது. இதுமட்டுமல்லாமல் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களே பெருமளவு கடனை பெற்றுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read
-
கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகை... சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கிய மேயர் பிரியா !
-
120- க்கும் மேற்பட்ட தொலைந்த மொபைல் போன்களை மீட்டெடுத்த ரயில்வே துறை... சாத்தியமானது எப்படி ?
-
"SIR குறித்து மக்கள் ஏமாந்துவிடாமல் எச்சரிக்கை மணியடிப்பது மிகமிகத் தேவை" - தி.க தலைவர் கி.வீரமணி !
-
Reels மோகம் : தண்டவாளத்தில் 2 நண்பர்களுக்கு நேர்ந்த துயர சம்பவம்!
-
2026-ல் “திராவிட மாடல் 2.0 தொடங்கியது!” என்பதுதான் தலைப்புச்செய்தி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!