India
“போலிஸ் கெடுபிடி - அறுவடை செய்த காய்கறியை குப்பையில் கொட்டிய விவசாயிகள்” : புதுச்சேரியில் நிகழ்ந்த சோகம்!
புதுச்சேரியில் உள்ள காட்டேரிக்குப்பம், சந்தை புதுகுப்பம், மண்ணாடிப்பட்டு, திருக்கனூர் ஆகிய பகுதிகளில் விவசாய சாகுபடிகள் நடந்து வருகின்றது. இந்த பகுதிகளில் கத்திரிக்காய், புடலங்காய், மிளகாய், அவரை மற்றும் தக்காளி போன்ற காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், விளைந்த காய்கறிகளை அறுவடைக்குத் தயாராக உள்ள நிலையில் காய்கறிகளை பறித்துக்கொண்டு விவசாயிகள் சந்தைக்கு எடுத்துச் சென்றால் பல்வேறு சிறமங்களை சந்திக்கின்றனர்.
குறிப்பாக விளைவித்த பொருட்களுக்கு சரியான லாபமே கிடைக்காத நிலையில், காய்கறிகளை விவசாயிகள் பறித்து சந்தைக்கு எடுத்து வர முயன்றால் போலிஸார் தடுக்கும் வேலையிலும் ஈடுபடுகின்றனர்.
குறிப்பாக, காட்டேரிக்குப்பம் கிராமத்தில் 6 ஏக்கர் பரப்பளவில் கத்திரிக்காய் மற்றும் பச்சை மிளகாய் பயிரிட்டு புதுச்சேரி அங்காடிக்கும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா காரணமாக இந்த காய்கறிகளை வெளி மாவட்டத்திற்கு அனுப்ப தடைவித்தித்துள்ளனர்.
இதனால் காட்டேரிக்குப்பத்தில் அறுவடை செய்த உஜாலா கத்திரிக்காயை ஏற்றி செல்ல வந்த வாகனத்தை போலிஸார் திருப்பி அனுப்பினர். இதனால் விற்க முடியாமல் வீணாகிய கத்திரிக்காயை மூட்டை மூட்டையாக விவசாயிகள் குப்பையில் கொட்டிய பரிதாபம் நடந்துள்ளது. அரசு விவசாய பொருட்களை விற்பனை செய்ய வழிவகை செய்யவேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !