India
“போலிஸ் கெடுபிடி - அறுவடை செய்த காய்கறியை குப்பையில் கொட்டிய விவசாயிகள்” : புதுச்சேரியில் நிகழ்ந்த சோகம்!
புதுச்சேரியில் உள்ள காட்டேரிக்குப்பம், சந்தை புதுகுப்பம், மண்ணாடிப்பட்டு, திருக்கனூர் ஆகிய பகுதிகளில் விவசாய சாகுபடிகள் நடந்து வருகின்றது. இந்த பகுதிகளில் கத்திரிக்காய், புடலங்காய், மிளகாய், அவரை மற்றும் தக்காளி போன்ற காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், விளைந்த காய்கறிகளை அறுவடைக்குத் தயாராக உள்ள நிலையில் காய்கறிகளை பறித்துக்கொண்டு விவசாயிகள் சந்தைக்கு எடுத்துச் சென்றால் பல்வேறு சிறமங்களை சந்திக்கின்றனர்.
குறிப்பாக விளைவித்த பொருட்களுக்கு சரியான லாபமே கிடைக்காத நிலையில், காய்கறிகளை விவசாயிகள் பறித்து சந்தைக்கு எடுத்து வர முயன்றால் போலிஸார் தடுக்கும் வேலையிலும் ஈடுபடுகின்றனர்.
குறிப்பாக, காட்டேரிக்குப்பம் கிராமத்தில் 6 ஏக்கர் பரப்பளவில் கத்திரிக்காய் மற்றும் பச்சை மிளகாய் பயிரிட்டு புதுச்சேரி அங்காடிக்கும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா காரணமாக இந்த காய்கறிகளை வெளி மாவட்டத்திற்கு அனுப்ப தடைவித்தித்துள்ளனர்.
இதனால் காட்டேரிக்குப்பத்தில் அறுவடை செய்த உஜாலா கத்திரிக்காயை ஏற்றி செல்ல வந்த வாகனத்தை போலிஸார் திருப்பி அனுப்பினர். இதனால் விற்க முடியாமல் வீணாகிய கத்திரிக்காயை மூட்டை மூட்டையாக விவசாயிகள் குப்பையில் கொட்டிய பரிதாபம் நடந்துள்ளது. அரசு விவசாய பொருட்களை விற்பனை செய்ய வழிவகை செய்யவேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Also Read
-
காசா நகரின் 40% பகுதிகளை கைப்பற்றிவிட்டோம், மீதம் இருக்கும் பகுதி விரைவில்... - இஸ்ரேல் அறிவிப்பு !
-
"தமிழ்நாட்டில் பெயர்களுக்கு பின்னால் சாதி இல்லை, பட்டம்தான் உள்ளது" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்!
-
“நம்முடைய அடையாளத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது” - இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பில் முதலமைச்சர்!
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !