India
“எதிரிகளால் ஒழிக்க முடியாமல் போன நமது பொருளாதாரத்தை மோடி ஒழித்துவிட்டார்” : டெல்லியில் ராகுல் ஆவேசம்!
குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் காங்கிரஸ் தலைமையில் நேற்றைய தினம் சத்யாகிரக போராட்டம் நடைபெற்றது. காந்தி நினைவிடத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் போராட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “மோடியின் நிர்வாகம் நாட்டை எவ்வாறு பிளவுபடுத்தி வெறுப்பை பரப்புகிறது என நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தெரிந்துகொண்டனர்.
நமது நாட்டின் வலிமையாக இருந்த பொருளாதாரத்தை அழித்தது ஏன்?, இளைஞர்களின் வேலை வாய்ப்பு, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் குரலை ஒடுக்கியது குறித்து மக்கள் கேட்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் பிரதமர் மோடி பதிலளித்தாகவேண்டும்.
அதுமட்டுமின்றி, வளர்ந்து வந்த இந்திய பொருளாதாரத்தை ஒடுக்கி, பொருளாதார வளர்ச்சியை முற்றிலுமாக மோடி சிதைத்துள்ளார். இந்த பொருளாதாரத்தை ஒழிக்க நமது எதிரிநாடுகள் முயற்சி செய்தன.
அவர்களால் நமது பொருளாதாரத்தை ஒழிக்கமுடியாமல் போனது, ஆனால் மோடி மக்களின் குரல் மற்றும் இந்தியப் பொருளாதாரத்தை ஒழித்துக் கொண்டிருக்கிறீர்.
ஏன் நீங்கள் மட்டும்தான் ஆடையை வைத்து அடையாளம் காணுவீர்காளா? ஒட்டுமொத்த இந்திய தேசம் உங்கள் ஆடையை வைத்து அடையாளம் காணுகிறது. ஏனெனில் நீங்கள்தான் 2 கோடி ரூபாய்க்கு ஆடை அணிந்துள்ளீர்கள். மக்கள் அல்ல.
இங்கு, இந்துக்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோரின் குரல்கள் இந்திய அரசியலமைப்பில் உள்ளது. அதை நீங்கள் ஒடுக்க முடியாது. அப்படி முயன்றால் இந்தியா உங்களை அனுமதிக்காது” என்று பேசினார்.
Also Read
-
”3 ஃபைலை திறந்து பாருங்கள்.. உருட்டல் மிரட்டலுக்கெல்லாம் பயப்பட மாட்டோம்” - உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
“மடைமாற்றும் அரசு.. அமைச்சர் மரிய வில்சனை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும் : அன்பில் மகேஸ் அதிரடி!
-
“தவெக அரசால் பரந்தூர் விமான நிலையத்திட்டம் ரத்து.. தமிழ்நாட்டிற்கு கறுப்பு நாள்”: டி.ஆர்.பி.ராஜா காட்டம்!
-
“பரந்தூர் விமான நிலைய பணிகளைத் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!” : உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
ஒரு திட்டம் நாட்டிற்காக வரும்போது, அரசியல் செய்யக்கூடாது : விஜய் அறிவிப்புக்கு தங்கம் தென்னரசு எதிர்ப்பு!