India
வெங்காயம் வாங்க வரிசையில் நின்றவர் மாரடைப்பால் மரணம் : ஆந்திராவில் துயரச் சம்பவம்!
தங்கம் விலையைப் போன்று நாளுக்கு நாள் வெங்காயத்தின் விலையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் மக்களும், வணிகர்களும் படாதபாடு படுகின்றனர். வெங்காய விலை உயர்வு குறித்து சமூக வலைதளங்களில் மீம்ஸ் பறந்து வருகின்றன.
தமிழகத்தில் மட்டும் கிலோ ஒன்றுக்கு 200 ரூபாய் வரை வெங்காயம் விற்கப்படுகிறது. அதேபோல் வட மாநிலங்களில் விண்ணை முட்டும் அளவுக்கு வெங்காயம் விற்கப்பட்டு வருகிறது.
இந்த பிரச்னையில் அரசு தரப்பிலும் எந்த வித நடவடிக்கையும் எடுத்தப்பாடில்லை. அரசின் அலட்சிய தன்மையைச் சுட்டிக்காட்டி தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
ஆனால், ஆந்திராவில் 95 ரூபாய்க்கு விற்கப்படும் வெங்காயம் அரசின் உழவர் சந்தையில் கிலோ ஒன்று 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனையடுத்து மக்கள் முட்டி மோதி வெங்காயத்தை வாங்கிச் செல்கின்றனர்.
இந்நிலையில், கிருஷ்ணா மாவட்டம் குடிவாடா பகுதியில் உள்ள உழவர் சந்தையில் வெகுநேரமாக வெங்காயம் வாங்குவதற்கு வரிசையில் நின்ற சாம்பையா (65) என்ற நபருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
அதனையடுத்து மயங்கி விழுந்த அந்த நபரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். வெங்காயம் வாங்க வரிசையில் நின்று உயிரிழந்த செய்தியை அறிந்த அப்பகுதி மக்கள் கவலைக்குள்ளாகினர்.
Also Read
-
யூ.ஜி.சி.யின் புதிய விதிமுறைகளுக்கு இடைக்கால தடைவிதித்த உச்ச நீதிமன்றம்! மௌனம் காக்கும் ஒன்றிய அரசு!
-
“இந்தியாவே உங்களுடைய சொத்து” : தோழர் ஜீவா குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன சுவாரஸ்சிய வரலாறு!
-
“தமிழ்நாடு வளர்ச்சியில் முன்னோக்கி செல்கிறது” : திராவிட மாடல் அரசை பாராட்டிய ஒன்றிய அரசு - முரசொலி!
-
T20 உலகக்கோப்பைக்கு தயாரான வாஷிங்டன் சுந்தர், திலக் வர்மா - தேர்வுக்குழு சொல்வது என்ன? : முழு விவரம்!
-
“NDA-வுக்கு தோல்வி எனும் தக்க பதிலடியை தமிழ்நாடு நிச்சயம் வழங்கும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!