India
‘பத்திரங்களில் கையெழுத்துப் போட்டால் மட்டுமே விடுதலை’- காஷ்மீர் தலைவர்களுக்கு மத்திய அரசு மிரட்டல்!
காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ ஆகியவற்றை கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தின் போது ரத்து செய்து அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது மோடி அரசு.
காஷ்மீரில் மக்களை ஒன்றிணைத்து தங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடாத வகையில் அரசியல் தலைவர்கள், முன்னாள் முதலமைச்சர்களான மெகபூபா முஃப்தி, ஃபருக் அப்துல்லா, உமர் அப்துல்லா உள்ளிட்ட பலரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாஜக அரசு வீட்டுச் சிறையில் அடைத்து வைத்துள்ளது.
சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள் விடுவிக்க வேண்டும் என நாடுமுழுவதிலும் இருந்து மத்திய அரசுக்கு கோரிக்கைகள் வலுத்து வருகிறது. இந்நிலையில், காஷ்மீர் விவகாரம் குறித்து ஊடகத்திடமோ, மக்களிடமோ பேச மாட்டோம் என பத்திரங்களில் கையெழுத்திடுமாறு வீட்டுச் சிறையில் உள்ள அரசியல் தலைவர்களை மோடி அரசு நிர்பந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்காக அதிகாரிகள், ஆட்சியர்கள் அரசியல் தலைவர்களுடன் பலகட்ட பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், மோடி அரசின் இந்த நிபந்தனைகளை ஏற்க காஷ்மீர் தலைவர்கள் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!