India
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் குளறுபடி - விசாரணை கோரி பொதுநல வழக்கு தாக்கல்!
தேர்தல் நடைமுறைகளை கடந்த பல ஆண்டுகளாக ஆய்வு செய்துவரும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான ஆய்வு அமைப்பு, 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் நிலவிய குளறுபடிகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை தொகுதிவாரியாக விரிவாக ஆய்வு செய்ததில் பல குளறுபடிகள் நடந்திருப்பது உறுதியாகி உள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. நாடு முழுவதுமுள்ள 542 நாடாளுமன்றத் தொகுதிகளில் 347 தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் ஒத்துப்போகவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோன்று தொகுதிக்கு ஒன்று என்று எண்ணப்பட்ட ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களில் பதிவான வாக்குகளிலும் வித்தியாசம் நிலவியதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. எனவே, 2019 நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து விரிவான விசாரணக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், 2019 தேர்தல் முடிவுகளோடு பாரம் 17 சி, 20, 21சி,டி,இ விபரங்களையும் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட உத்தரவிட வேண்டும். இதனை எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் பின்பற்றவும் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
எதிர்வரும் தேர்தல்களை குளறுபடி இல்லாமல் நேர்மையாக நடத்த தேவையான உத்தரவுகளை தேர்தல் ஆணையத்துக்குப் பிறப்பிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Also Read
-
‘வந்தே மாதரம்’ பாடலை முழுவதும் பாடச்சொல்வது மதவெறியின் உச்ச அக்கிரமம்: தி.க தலைவர் கி.வீரமணி கண்டனம்!
-
“பிரிவினைக்கு இடம் கொடுக்காமல், அன்பு கொண்ட சமுதாயத்தை உருவாக்குவோம்!” : வள்ளலார் விழாவில் முதல்வர் உரை!
-
இனி சென்னை மத்திய கைலாஷில் நெரிசல் இல்லை..! - ரூ.60.68 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் திறப்பு!
-
ஈரோட்டில் ‘நொய்யல்’ - இராமநாதபுரத்தில் ‘நாவாய்’ அருங்காட்சியகங்களுக்கு அடிக்கல்! : ரூ.68 கோடி ஒதுக்கீடு!
-
ரூ.24.30 கோடியில் ‘கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம்’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!