India
வெளிமாநிலத்தவர்கள் உள்ளே வரும் போது அரசிடம் பதிவு செய்ய வேண்டும் - மேகாலயா அரசு புதிய சட்டம்!
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவுக்கு சில சிறப்பு அந்தஸ்துகள் உள்ளன. சமீபத்தில் காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. மேலும், காஷ்மீர் மாநிலத்தை காஷ்மீர் லடாக் என்ற இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து. இதேபோல மேகாலயாவிற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தையும் ரத்து செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மேகாலயா மாநிலத்தில் தங்கினால், அரசிடம் பதிவு செய்ய வேண்டும் என்ற அவசர சட்டத்தை அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது. தேசிய மக்கள் கட்சி தலைமையிலான மேகாலயா ஜனநாயக கூட்டணி அரசு இந்த அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அவசர சட்டம் உடனே அமலுக்கு வந்துள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மேகாலயா துணை முதல்வர் பிரஸ்டன் டின்சோங் கூறுகையில், "மேகாலயாவில் 24 மணி நேரத்திற்கும் மேலாக தங்க விரும்பும் எந்தவொரு நபரும் அதுகுறித்த தகவல்களை அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும். இது அவர்களின் சொந்த நலனுக்காகவும், அரசாங்கத்தின் நலனுக்காகவும் செய்யப்படுகிறது. தகவல்கள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும்”என கூறினார்.
ஒருவேளை சட்டத்தை மீறினால், ஐ.பி.சி 176 அல்லது 177 பிரிவின் கீழ் தண்டிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மிசோரம், நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இந்த சட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!